Thursday, August 28, 2008

வேதாளமாய் எழும் வார்த்தைகள்



















முட்டி எழுகின்றன வார்த்தைகள் !
வெறும் தடமின்றி,
உறையும் இடமின்றி,
கரைந்து செல்கின்றன
சில !
தயங்கி நின்ற பொழுதுகளின்
தொண்டைக்குழி இடுக்குகளில்,
சிக்கி திணறிய
வார்த்தைகள், சில வலிகளாய்!
நில்லென, மலிந்து கெஞ்சுகின்றது
என் மூளை !
எனினும்
ஒன்று, இரண்டு, மூன்றென
நில்லாத அடுக்குகளாய்
மனமெங்கும் வார்த்தைகள்!
தூள்தூளாக்கி செல்கின்றன
பெரும் காற்றாய்
சில வார்த்தைகள் !
இனிய தருணமாக்கி,
சுகம் தரக் கூடுமென,
பொத்தி வைத்த சில வார்த்தைகள்
மட்டுமே ஒளிந்து
நிற்க்கின்றன,
என் மன பெருவெளியில் !

1 comment:

Anonymous said...

Although we have differences in culture, but do not want is that this view is the same and I like that!

 

| இங்கிலீஷ்'ல |