Friday, August 1, 2008

வெள்ளிக்கிழம ராமசாமி

மொத மொதலா தமிழ்ல பதிவு தொடங்கி இருக்க ...இன்னைக்கு வெள்ளிக்கிழம நல்ல நாளு, இன்னைக்கே எதுனா எழுதி போஸ்ட் பண்ணிடு ,ரொம்ப மங்களகரமா இருக்கும் ..அப்படின்னு உள்ளுரா ஒரு பீலிங்க்ஸ்...

நம்ம தான் எப்பயிமே 'follow your ஹார்ட் -அது எங்க கொண்டு போகுதோ ,முட்டு சந்தோ, புளியந்தோப்போ' ன்னு போய்க்கினே இரு ' - பார்ட்டி ஆச்சே..செரின்னு வெள்ளிகிழம சாயங்காலம் ஆனாலும் பரவ இல்லைன்னு சொல்லிட்டு புது போஸ்டுக்கு என்ன மேட்டர்'ல எழுதலாம்னு கம்ப்யுட்ட்ற உத்து உத்து பார்த்துட்டு யோசிச்சிட்டு இருந்தேன்

'டேய் என்னடா மணி 8 ஆகுது , இன்னைக்கு வெள்ளி கிழம வேற, என்ன பண்ற கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து அதுவும் மானிட்டர ஆப் பண்ணிட்டு ' ..(அடங்க...சொல்ல கூடாதா , என்னடா ஒரே இருட்டா இருக்கேன்னு பார்த்தேன் ).... கேட்டது நம்ம 'வெள்ளிகிழம ராமசாமி' சார் .இவருக்கு இந்த பேரு எப்படி வந்துதுனா அப்பால என்னைக்காவது ஒரு நாள் பார்ப்போம். அதுக்கு முன்னாடி எங்களுக்கு வெள்ளி கிழமை, சனி கிழமை முக்கியமா இராத்ரிகள்ள ஏற்படுற பல வித திகில்-பிகில் அனுபவங்களுக்கு இவரு தான் மூலக்காரணம் :) (ரூட் காஸ் )'

சரி அண்ணன் சொல்லிட்டாறேய்ந்னு நானும் செட்டியாரும் கிளம்பினோம்....

எங்கெனே போகலாம் இன்னைக்கு?

"இன்னைக்கு என்ன நாள் ? என்ன கேள்வி இது ? வெள்ளிக்கிழமை ஆனா நம்ம பீர் ஊத்தாம இருந்த குலதெய்வ குத்தமாகிடும் "அப்படினு நம்ம ராமசாமி அண்ணன் கவுண்டர் ரேன்ச்சுக்கு ட்யலாக்க விட, செட்டியாரும் ஆமாப்ப இன்னைக்கெல்லாம் ஒரே Heattu' பாடிய கொஞ்சம் கூல் பண்ணனும் பா' அப்படிங்க , செரி 'எல்லாரும் இன்புற்று இருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே'னு நானும் அப்பொறமா ப்ளொக்'கிகாலம்னு கிளம்பினேன்

வழக்கமா போற queens பாரே போகலாம்னு 8.30 மணிக்கு முடிவு பண்ணி ஒன்பது மணிக்கு டாக்ஸ்சில ஏறினோம் (இதுக்கு இடைல ராமசாமி அண்ணன் வீட்ல போயி புல் பாடி ஷவெர் எடுத்து ,ஹேர் ஜெல், பாடி ஜெல் ,பர்ப்யும், எல்லாத்தேயும் கொட்டி கவுத்தி கொஞ்சம் உடம்புலேயும் பூசிக்கின்னு , செட்டியாரு வீட்ல போயி அம்மணி கிட்ட (அவரு அம்மணி கிட்ட) பெர்மிஷன் லெட்டர் எல்ல்லாம் எழுதி பெர்மிஷன் வாங்கிகின்னாரு )

பாரே ஒரே அமளி துமளியா இருந்துச்சு , ஏதோ உள்ளூர் கவுன்சிலருக்கு பிறந்த நாள் போல (அவுங்க இது படி லோக்கல் கம்யுனிஸ்ட் பார்ட்டி தலைவர் தான் லோக்கல் கவுன்சிலர் , பஞ்சாயத்து தலைவரு, வார்டு செயலாளரு எல்லாம்) எல்லாருக்கும் ஒரு ரவுன்டு TEQUILLA ஃபிரியா ஊத்திட்டு இருந்தாரு.

ஆகா ! ஆரம்பமே TEQUILLAவா, இன்னைக்கு விளங்குச்சுரா சாமின்னுட்டு கபக்குன்னு எடுத்து ஒரே மொடக்கா முழுங்கினோம் . கம்மினாட்டிங்க TEQUILLA கொடுத்தவனுங்க சால்ட் வைக்காம போயிட்டானுங்க . ராமசாமி அண்ணன் TEQUILLA எரிச்சல் தாங்காம நம்ம ஊரு டாஸ்மாக் ஞாயபகத்துல பக்கத்துலே இருந்த ப்ளேட்ல இருந்து கொஞ்ச சால்ட்ட எடுத்து நக்கிடார்று . எனக்கு அந்த பக்கம் இருந்த செட்டியாரு அப்படியே ஸ்லோவ் மோஷன்ல அங்க கைய கொண்டு போய்ட்டு சால்ட் மேல வச்சவுடன "கிண்கிணி மிங்கினி " ன்னு கிளு கிளுனு ஒரு சிரிப்பொலி

நிமிர்ந்து பார்த்தா ரெண்டு அழகிகள் (ஒரே போதை'பா ) ...ராமசாமி அண்ணன பார்த்து ஒரே சிரிப்பு ,அண்ணனும் ஸ்டைலா ஒரு காந்த பார்வைய அவுங்க மேல செலுத்தினாறு , செட்டியாரு தாவி முன்னாடி வந்து ஹாய்' ன்னாரு

கொஞ்ச நேரத்து 9 TEQUILLAவோட ஊரு ,பேரு, வேலை, ஓலை, வூடு ,வாசல் விவரம் எல்லாம் பேசி முடிச்சோம் அவளுகளோட , ரெண்டு அழகிகளும் திக்கி திக்கி திணறி பேசினாலுக ,ஒண்ணு சீனா,ஒண்ணு பிலிப்பைன்ஸ்...

ராமசாமி அண்ணன் திடீர்னு, "என்னப்பா நம்ம நாட்ல மட்டும் இவ்ளோ லஞ்சம் ,ஊழல், கூதல்னு ஆரம்பிச்சாரு...கூடவே செட்டியாரும் இந்தியன் கிரிமினல், பைனான்சியல், எகனாமிகல்,ஜியாமெட்றிகல்,லா (law)' என்ன என்ன சொல்லிருக்கு, அதுல எவ்வளவு ஒட்டைங்க, அதை எப்படி ஒட்டு போடுறதுன்னு ஆ'ரம்'பிச்சுட்டாரு ...

இதுக்கு இடைலா அந்த ரெண்டு அழகிகளும் டான்ஸ் ப்ளோருக்கு போயி ஒரே குத்தாட்டமா போட ஆரம்பிச்சுட்டாளுங்க . நம்மக்கு அதுவா முக்கியம் , எப்படியாவது இன்னைக்கு நைட்டுக்குள்ள பேசி இந்தியாவ திருத்திரதுன்னு நாங்க பயங்கர டிஷ்கஸன்ல இருந்தோம்.

நல்லா போதை ஆக வேண்டிய நேரத்துல கண்டத பேசி 3 பேருக்கும் போதை இறங்கிருச்சு ....இன்னும் 6 TEQUILLA ஓடிருச்சு...அப்பொறம் நம்மள பத்தி கேக்கனுமா ?, என்னமோ நம்ம தான் புரட்சி கலைஞருக்கு அடுத்தாப்புலே புள்ளி விபர ராசா மாதிரி, புள்ளி-சில்லி விவரத்தோட இந்தியா எப்படி திருந்தவே திருந்தாதுனு அடுக்கிட்டே இருந்தேன் ...பார் கலர் லைட் எல்லாம் வெள்ளை வெள்ளையா தெரியா ஆரம்பிச்சுது.. ஐயோ ! போதை இறங்குது போலா'ன்னு அண்ணன் இன்னும் TEQUILLA சொல்லுவுமானு இந்த பக்கம் கைய போட்டா காத்துல நிக்குது கையி , அந்த பக்கம் செட்டியாரே' ன்னு கைய போட்டா சேர்' உட்காருது கையி ...

செரி உச்சா போயி இருப்பாங்கன்னு bartender'ட TEQUILA சொல்லலாம்'னு அவன கூப்பிட்டா அவன் 'sir ur friends have already ordered drinks for you' னான். சே! எவ்ளோ நல்லவங்க அவுங்கன்னு, அவன்ட்ட எப்பொ order பண்ணினாங்'கன்னு கேட்டா , "they went for dancing 15 mins Back and asked to give 3 TEQUILLA shots to you'னு சொன்னான். அடங்கொய்யால, அப்போ இவ்ளோ நேரம் தனியாவ பேசிட்டு இருந்தேன்னு மனசுல்ல குமுரிட்டே , DANCE FLOORஎ கொஞ்சம் எட்டி பார்த்தா , "செட்டியாரு சீனா காரியா வச்சு சல்சா ஆடிட்டு இருக்காரு, ராமசாமி அண்ணே பிலிப்பைன்ஸ்காரியோடா ஜல்சா பண்ணிட்டு இருக்காரு".....

மனசுக்குல ஒரு "அடங்கொக்காமக்கா"


செரினு ஒரு 20 மினிட்ஸ்ல இன்னும் 2 TEQUILLA'வ உள்ள தள்ளிட்டு போலம்மாணே'னு ரெண்டு பேருக்கும் MSG அனுப்பிச்சா "SEE YOU TOMORROW " ஒரு ரிப்லே வருது

உனக்கு இது தேவைடா மகராசு'னு வெளிய வந்து TAXI'அ புடிச்சு பக்கத்து வீட்டு கதவை எல்லாம் தட்டி, தடுமாரி, வீடு மாறி, மொள்ளமாறி'ன்னு திட்டு எல்லாம் வாங்கி ஒரு வழியா வீடு வந்து தூங்கிப்பொட்டென்.

கனவுல எல்லாம் இந்த பொழப்புக்கு பேசாம "இந்தியாவின் இறையாண்மையும் அமெரிக்காவின் பேராண்மையும்'னு ஒரு கட்டுரையோ, "வாழாத வாழ்க்கையின் பெருவெலியின் ஒரத்தில் நின்று எச்சி துப்பிய வாழவந்தானு" ஒரு கவிதையோ எழுதி மொதப்பதிவ பொட்டு இருக்கலாம்'ம்னு அசரிரீ.

பி.கு
பிலிப்பைன்ஸ்காரி ராமசாமி அண்ணனொட வீக் என்ட் டேட்டிங் லிஸ்ட்'ல சேர்ந்துட்டா.

வீட்டுக்கு 3.30 மணிக்கு வந்த செட்டியாரு TEQUILLA சூடு தாங்க முடியாம பாத்ரூம்குள்ள போனவரூ 6.00 மணி வரைக்கும் உள்ளேயே வூடு கட்டி கும்மி அடிச்சிட்டு இருந்துருக்காரு.

அடுத்தா நாள் சாயங்காலம் 7 மணிக்கு கங் ஒவெர் தலைவலிக்காக திரும்பவும் அதே பார்ருக்கு நான் போக உள்ளெ வேற எதோ ஒரு கவுன்சிலருக்கு பொறந்த நாளுனு ஓசி ரம்மு .... சாமி ஆள விடுங்கப்பானு ஓடி வந்துட்டேன்.

No comments:

 

| இங்கிலீஷ்'ல |