Saturday, February 21, 2009

தமிழ் கூட்டம் - கடைசி வாய்ப்பு.


















தமிழ் இனத்திற்காக இது வரைஏழு இளைஞர்கள் தீக்குளித்து உள்ளார்கள்...அனைவரும் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். நாமஎல்லாரும் நல்லா சோறுதின்னுட்டு , கேடு கெட்டடிவியும் ,சினிமாவும்பார்த்துட்டு இவன்நொட்டிட்டான், அவன்கிழிச்சிட்டானு புடுங்கித்தனமாபேசிட்டு இருக்கிற, அதேவேளைல சிந்தனை வசப்பட்டு, தீர யோசித்து நிதானமாகா அறிக்கை எழிதிட்டுதன்னை தானே எரிச்சிட்டு இருக்காங்க.

ஒரு பக்கம் நமது கண் முன்னாடியே தமிழ் இனத்தின் இதயம் மெல்ல, மெல்லஅரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. உலகம் முழுக்க இதுக்கு கூட்டு வேற நம்மதாய் திருநாடு உள்பட. இன்னொரு பக்கம் அத பத்தி எதுவுமே கவலைப்படாமவேற ஒரு தமிழ் கூட்டம் சினிமா, அரசியல், ஜாதி, வேலை,குடும்பம் மயிருன்னுஇருக்கு. இன்னொரு கூட்டம் பெரிய அறிவாளிங்க மாதிரி இது தப்பு, அது சரின்னுஆராய்ச்சி பண்ணிட்டு அறிக்கை விட்டுட்டு இருக்கு. அதுல இருக்கிற நிறைய முட்டாள்களுக்கு தெரியாது இந்த போராட்டம் அவர்களுக்காவும் அவர்களின் நாளைய வாரிசுகளுக்காகவும் சேர்த்து தான்னு .

விடுதலை
புலிகள் நிறைய தவறுகள் செய்து
உள்ளனர்.இனிமேலும்செய்வார்களான்னு தெரியாது. ஆனா விடுதலை புலிகளை அழிய விட்டால், தமிழ்இனத்தின் தனி அடையாலாமா ஒரு ராணுவமோ, அதிகார அமைப்போ , கல்விமுறையோ , வாழ்க்கை கூறுகளோ எதிர் காலத்தில் ஏற்படாது.

கலாச்சார பலம் இல்லாத எந்த வித முன்னேற்றமும் சமூக ஒழுங்கைஏற்படுத்தாது.
நமது பலம் தமிழ் கலாச்சாரம். அதை சிறிது சிறிதாக இழந்து கொண்டுஇருக்கிறோம்.
இந்த தனி நாடு போராட்டத்தின் வெற்றி கட்டாயம் நமது பலத்திற்கு இன்னும்
வலு சேர்க்கும்.


ஏற்கனவே இளிச்சவாயன்னு தண்ணி தர மாட்டேனுங்குறாங்க , எங்கபோனாலும் தர்ம அடி விழுகுது ...தைரியமா எதிர்த்து கேட்க நாதி இல்லை . என்னகாரணம்னா, தன்மானமுள்ள உரிமைக்கு எதிராக எந்த சமாதானமும் செய்துகொள்ளாத தலைமையும் போராட்ட குணமும் கொண்ட கூட்டமோ நம்மிடத்தில்இல்லை.

ஈ.வே.ராமசாமி, ஹிந்தி எதிர்ப்பு காலத்துக்கு அப்பொறம் ரொம்ப நாள் கழிச்சுஇன்னைக்கு இப்போது தமிழ் இன அழிப்பிற்கு எதிராக எழுந்துள்ள ஒரு சிறியதீப்பொறியை சரியா ஊதி பெரிதாக்கா விட்டால் எல்லாருக்கும் எள்ளுன்னுஆய்டுவான் தமிழன்.

பின்னாடி பொலம்பி ஒரு பிரயஜோனமும் இல்லை.


தீக்குளித்த சகோதரர்களுக்கும் களத்தில் மற்றவரின் எந்த வித உதவியும் இன்றிதனித்து போராடும் புலி வீரர்களுக்கும், கலச்சமரர்களுக்கும் வீர வணக்கங்கள்.

Kawzulu condems (எங்கோ இருக்கிற ஒரு நாடு கண்டனம் தெரிவிக்கிறது. இருவது மைல் தொலைவில் இருக்கும் இந்தியா தன்னுடைய கடமையை மறந்து நிற்கிறது ).


புலிகள் அழிவது கடினம் அல்லது அது நடக்காது என்பதற்கு ஒரு சாட்சி

Saturday, January 17, 2009

சிவாஜி கணேசன் - இலங்கை வானொலி பேட்டி.

சிவாஜியின் அருமையான சிறிய தமிழ் உரை.
இன்று சிவாஜியின் நடிப்பு பற்றி பலருக்கும் பல விதமான கருத்து வேற்றுமை இருந்தாலும் அவர் ஒரு மிகச்சிறந்த கலைஞன் என்பது மறுக்க முடியாத உண்மை. அதை எல்லாம் விட மிக அன்பான பண்பு மிக்கவர். அவர் அரசியலிலும் அதை எதிர்பார்த்ததே அவருடைய அரசியல் வாழ்வு குழப்பத்துடன் முடிவுற்றதற்கு காரணம்.

அவர் இலங்கை வானொலியை சார்ந்த அப்துல் ஹமீதிற்கு அளித்த ஒரு சிறிய வானொலி பேட்டி. பேட்டியை கேட்க படத்தை க்ளிக் செய்யவும்.

நன்றி
இலங்கை வானொலி
தமிழ்வாணன். காம்

Monday, January 12, 2009

குழந்தைகளின் சாபங்கள்.

மரணங்கள் அடர்ந்த இந்த வாழ்க்கையில் நம்முடைய மகிழ்ச்சி என்பது நிலையான ஒன்று என்பதில் இருந்து எப்பொழுதோ தனிமை பட்டு விட்டது. வரையறுக்கப்பட்ட கோட்பாடுகள் கொண்ட நிகழ்வுகளில் இருந்து மட்டுமே தொலைந்து போன உவகையையும், பரவசங்களையும் சில மணிநேரங்கள் மட்டுமே பெற்று கொண்டு, மறுபடியும் உணர்ச்சிகள் மழுங்கிய இந்த உலகத்துக்குள் திரும்ப நுழைகிறோம்.

இப்படிப்பட்ட சாபக் கேடாக மாறி கொண்டே இருக்கும் உலகத்துக்கு என்று ஒரு சில வரங்கள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. இயற்கை அளித்த அவ்வெல்லா வரங்களிலும் மிகச்சிறந்த வரம் எதுவென்றால் நம்மோடு கொஞ்சிக் குலாவி மகிழும் மகிழ்த்தும் குழந்தைகள்.

குழந்தைகள் நமக்கு என்றுமே ஒரு சுவாரசியம் குறையாத கூட்டாளிகள்.நம்முடைய நெருங்கிய காதலி(கள்) அல்லது நண்பர்களிடம் கூட நமக்கு மௌனமான , சோர்வான தருணங்கள் ஏற்பட்டுவிடும். ஒரு நிலைபாடு அற்ற இது தான் செய்ய வேண்டும் அல்லது இதை தான் செய்யும் ,செய்ய போகிறது என்ற வரையறைக்குள் சிக்காமல் இருக்கும் இயல்பே குழந்தைகளை சுவாரசியம் குன்றாதவர்களாக ஆக்கின்றது.

நாம் குழந்தைகளுக்கு வாழ்க்கையை பற்றிய அனைத்து விஷயங்களையும் சொல்லி தர முயல்கிறோம்.ஆனால் நமது குழந்தைகள் வாழ்க்கை என்றால் என்ன என்பதை நமக்கு உணர்த்துகின்றன. குழந்தைகளும், செல்வமுமே வாழ்க்கையின் அலங்காரங்கள் என்கிறது திருக்குர்ஆன்.

அப்படிப்பட்ட குழந்தைகளின் குழந்தைப்பிராயமே அவர்களுக்கு தேவதைகளால் ஆசிர்வதிக்கப்பட்ட அளவில்லாத கொடுப்பினை. அந்த பேரின்பத்தை இன்று சிறிது சிறிதாக உலகமயமாக்கல் மற்றும் அதன் முன்பின் காரணியான நவீனமயமாக்கல் இரண்டும் போட்டி போட்டு திருடி கொண்டு இருக்கின்றன.

குழந்தைகளுக்கு சிறந்த கல்வி முறை எதுவென்றால் அவர்களை அவர்களின் போக்கில் விளையாட விடுவது.ஆனால் இன்றோ விளையாட்டு என்பது kinder garden னில் இருக்கும் playrooms'சுக்குள்ளும் , பள்ளிக்கூட மணி ஒலிக்கும் விளையாட்டு மைதானங்களுக்குள்ளும் அடங்கி விட்டது. அதை தாண்டி வெளியில் விளையாடும் குழந்தைகளை பார்ப்பது ஒரு அபூர்வமான தரிசனம் என்றாகிவிட்டது.

கில்லி, கோலி, கபடி , சீட்டுக்கட்டு செதுக்குறது , ஒளிஞ்சி புடிச்சு , பாண்டி, எறிபந்து , கல்லாமண்ணா, நொண்டி, பம்பரம் வரை எத்தனையோ விளையாட்டுக்களை, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினம் தினம் நம்முடைய குழந்தைகள் விளையாடி தினம் தோறும் நமது தெருக்களை அலங்கரித்து வந்தது. இன்று எல்லாம் அடங்கி வீட்டுக்கு வந்தவுடன 1 மணி நேரம் ஹோம் வொர்க் , 1 மணி நேரம் டியூஷன் , அப்பொறம் 1 மணி நேரம் கார்ட்டூன், அப்புறம் ஒரு மணி நேரம் play ஸ்டேஷன் அல்லது video Games என்றாகிவிட்டது.

கோலி விளையாட்டினில் மட்டும் மொத்தம் 13 வகையாவிளையாடி இருக்கிறேன். சத்தியமாக எந்த கேம் guide 'அல்லது கேம் tutor' ரோ அருகில் இருந்து சொல்லி தரவில்லை. சில ஏற்கனவே இருந்தன. சில நமது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாமாக உருவாக்கியவன.


குழந்தைகளின் சிருஷ்டிகரத்தன்மை நாம் வாங்கித்தரும் puzzle பாக்ஸ்'சிலோ அல்லது transformer டாய்ஸ்'சிலோ இல்லை.அவர்களுக்கு உண்டான உலகத்தை, அவர்களுக்கு உண்டான விளையாட்டுகளை அவர்களுக்கு பிடித்தமான முறையில் அவர்களின் நண்பர்களோடு அவர்களே மிகச்சிறப்பாக சிருஷ்ட்டித்து கொள்வார்கள். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அப்படி பட்ட உலகம் உருவாக தடையாக இல்லாமல் இருபதே. அவர்களின் நண்பர்களாக வீடியோ கேம்ஸ்சையும் , கார்ட்டூன்களையும் நாமே தீர்மானித்து அவர்களிடம் திணிக்காமல், தராமல் இருபதே.

இன்று எல்லாக்குழந்தைகளின் மிகப்பெரிய எதிரிகளாக இருப்பது வயதுக்கு மீறிய அறிவும் , அதை போற்றி கொண்டாடும் பெற்றோர்களுமே. வயதுக்கு மீறிய அறிவு ஒரு வரம் அல்ல. சாபம். கள்ளங்கபடமற்ற குழந்தைகள் அந்த தன்மையை வயதின் மூப்பால் இயல்பாக இழக்க வேண்டுமே தவிர, அதையும் அறிவின் பெருமைக்காக அல்ல. இப்படி பட்ட அறிவை வலுக்கட்டாயமாக குழந்தைகளிடம் புகுத்தும் பெற்றோர்கள் சாபக்கேடுகள். அதற்கான சிறப்பான வழிமுறைகள் கணினியும், வீடியோ கேம்ஸ், கார்டூன்ஸ் மற்றும் இவை அனைத்தையுமே தனக்கான உலகம் என்று குழந்தைகளை எண்ண வைக்கும் நேரமற்ற பெற்றோர்கள்.


இன்று குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக வரும் வீடியோ கேம்ஸ் அறிவோடு சேர்ந்து வயதிற்கு மீறிய வன்முறைக்கான குணாதியசங்களை அழகாக சொல்லித்தருகின்றன. நூறு கேடு கெட்ட ஹீரோயிச மசாலா படங்களைப் பார்த்து நாம் பெற்ற சீரழிவை நான்கு அல்லது ஐந்து வீடியோ கேம்கள் செய்து விடுகின்றன.

உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி இரண்டுமே உருவாக்கம் பெற்று வளரும் இந்த வயதில் , உடல் சார்ந்த விளையாட்டுகளே குழந்தைக்கு இவ்விரண்டையும் அளிக்கின்றன. ஆனால் இன்றோ பள்ளி முடிந்து அபார்ட்மென்ட் சிறைக்குள் புகும் குழந்தை மறுநாள் அதிகாலை தான் அரக்கப்பறக்க அடுத்த நாள் உலகத்தை சில நிமிடங்கள் விழுங்க முடிகின்றது பள்ளி சிறைக்குள் செல்லும் வரை.

தெருக்கள் எல்லாம் இருள் சூழ்ந்து வெறிச்சோடி கிடக்கின்றன டியுஷன்களும் , வீடியோ கேம்களும் கபளீகரம் செய்த குழந்தைகள் இன்றி.இப்படி உருவாக்கம் பெறுகின்ற குழந்தைகளிடம் குழுமனப்பான்மையோ, பொதுவிற்க்காக சிந்தித்தலோ, அன்பு சார்ந்த குணங்களோ மட்டுப்பட்டு போய் வெற்றி சார்ந்த வெறியே மிஞ்சி நிற்கும். அல்லது தோல்வி என்பதை தாங்கிக்கொள்ளும் எந்த மனோபலமும் மிஞ்சாது.

இன்று உலகத்திலேயே மாணவர்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் மிகச்சிறப்பான இடத்தில் இருக்கிறது இந்தியா. இது வரை இந்த தற்கொலை வியாதி மூன்றாம் வகுப்பு குழந்தைகள் வரை முன்னேறி உள்ளது. என்ன கொடுமை பாருங்க..?? இன்னும் கொஞ்ச நாள்ல LKG பெயில்'ன்னு தற்கொலை செஞ்சிட்டங்கன்னு செய்தி வராம இருந்தா சரி.

ஆங்கிலேய அடிமை குமாஸ்தா கல்வி முறை சாபக்கேட்டில் இருந்தே மீள இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் எடுக்கும் போலத்தெரிகிறது. இதில் நின்று கொள்ளும் விஷமாக பரவும் இந்த தாய் எட்டடி பாய்ந்தால் குட்டியை நாற்பது அடி பாய வைக்கும் நவீன வியாதிக்கல்விமுறை வேறு. மொத்தமாக ஒரு நூற்றாண்டிற்காண குழந்தைகளை கண் முன்னே பலி கொடுத்து கொண்டு இருக்கிறோம் , புன்னகைத்தவழ.

அவர்களின் சாபங்கள் என்றுமே நமது கல்லறைகளில் , அழிந்து தொலைந்து போன சிரிப்பு சத்தங்கங்களிலான மலைப்பிரசங்கங்களாக ஒலித்து கொண்டிருக்கும்.

ஒரு முறை ஒரு ஜென் துறவியிடம் சென்று தன்னுடைய நான்கு வயசு பிள்ளையின் அட்டகாசம் தாங்க முடியலை, அவன பேசமா உங்க மடத்துல சேர்த்து பெரிய மகானா ஆக்கிருங்கன்னு சொன்னாரு ஒருத்தரு. அதுக்கு அந்த துறவி சரி அதுக்கு முன்னாடி உனக்கும் உன் புள்ளைக்கும் ஒரு சின்ன போட்டி, யாரு தோற்கிறாங்களோ அவுங்க மடத்துல சேர்ந்துட வேண்டியது தான்'ன்னு சொல்லிட்டாரு. நாலு வயசு புள்ளை தான ,அவன ஜெயிக்க முடியாத நம்மால, பய புள்ளைய எப்படியாவது மடத்துல சேர்த்துடனும்னு சரின்னு சொல்லிட்டான் நம்ம ஆளு.

துறவி வந்து அந்த ஆளுகிட்டேயும் அவனோட குழந்தைகிட்டேயும் ஒரு ஆயிரம் மரப்பொம்மையையும், பத்து வர்ண பொட்டியையும் கொடுத்து ஆளுக்கு பாதியா இது எல்லாத்துக்கும் வித விதமான வண்ணம் அடிங்க. யாரு சந்தோசமா, சீக்கிரமா செய்யிறீங்களோ அவுங்க வீட்டுக்கு போலாம் தோத்தவுங்க மடத்துல சேர்ந்துடுங்க 'ன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

குழந்தை ரொம்ப நேரம் அந்த பொம்மைகளோட விளையாடுச்சி.அப்பொறம் வண்ணங்களோட விளையாடுச்சி.அப்பொறம் கைல வண்ணத்த அள்ளி சரசரன்னு அதுக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் பொம்மைகள் மேல பூச ஆரம்பிச்சுருச்சி. மணிநேரத்துல வேலைய முடிச்சிட்டு துறவிகிட்ட போய் இன்னும் கொஞ்சம் பொம்மை வேணும்னு கேட்க ஆரம்பிச்சுருச்சி .

நம்ம ஆளு அங்க உள்ள உட்கார்ந்து என்ன இப்படி ஆகிப் போச்சு நம்ம நிலைமை'ன்னு பொலம்பிகிட்டே வண்ணத்த தூரிகைன்னால எடுத்து எடுத்து பூசிட்டு இருந்தான்.

சாமி வந்து அவன்ட்ட ரெண்டு காவித்துணிய கொடுத்து நீ போய் மடத்து வேலைகள கவனிக்க ஆரம்பின்னாரு .

அவர்களின் போக்கில் அவர்களை விட்டு குழந்தைகளிடம் தான் நாம் புதிய சிந்தனைகளை கற்க முடியும், என்பதற்கு சொல்லப்படும் ஜென் கதை இது .

Friday, January 2, 2009

சூபியிசமும் முல்லாவும்.


சூபியிசம் என்றல் என்ன ? அப்படின்னு ஒரு சூபியிடம் கேட்டாராம், ஒரு சீடர். அதற்க்கு அந்த சூபி சொன்ன பதில் "காஞ்ச சாணி ".

உலகத்தையும் ,அதன் நடைமுறைகளையும் இடது காலால் எட்டி உதைத்தவாறு உண்மை பற்றிய அறிதலை ,அதற்க்குண்டான தேடல் உடையவர்களுக்கு மிக மிக நிதானமாக, மண்டை காஞ்சு போற அளவுக்கு இல்லாமல் ஒரு வித கேலியுடனும் நகைச்சுவையுடனும் புரிய வைப்பது தான் சூபி ஞானிகளின் குறிக்கோளாக இருக்கிறது. 

குழந்தைகளின் கேளிக்கை மனோபாவத்துடனேயே சூபிக்களின் வாழ்நாள் முழுதும் கழிகிறது.அவர்களுக்கு ஒரு நாளும் சோம்பல் கிடையாது, வாழ்க்கை சலிப்படைவதும் கிடையாது.ஒவ்வொவொரு நாளும் புது புது விளையாட்டுக்கள்.முட்டாள்களை போன்ற கேள்விகளின்,செயல்களின் மூலம் ஆழ்ந்த சிந்தனையை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். 

தமிழ் நாட்டின் பல ஊர்களில், பல மஸ்த்தான் சாகிபுகளின் தர்காக்களை காணலாம். கொஞ்சம் அவர்களின் கதையை கேட்டால் அவர்களின் பல்வேறு செயல்கள், குழந்தைகளை போன்று அல்லது மன நிலை தடுமாறியவர்கள் என்று நம்மால் சொல்லப்படுபவர்களை போன்றோ இருக்கும்.மொத்தத்தில் சாதரண தன்மையில் இருந்து சற்றே நகர்ந்த செயல்பாடு உடையவர்களாவே இருக்கின்றாகள். என்றாலும் உலகை தன்னுடைய கேலித்தனமான செய்கைகளால் ஒவ்வொரு நாளும் சிந்திக்க வைத்து கொண்டே இருக்கிறார்கள் . எல்லா சூபிக்களும் ஞானிகளும் இப்படி வாழ்ந்தார்களா என்றால் இல்லை .... மிக குறைவானவர்களே இப்படி இருந்திருக்கிறார்கள். 

அவர்களுள் இன்று உலகம் முழுவதும்,நிறைய உள்ளர்த்தங்கள் பொதிந்த தன்னுடைய தற்குறித்தனமான வேடிக்கை நிகழ்வுகளால் என்றென்றும் அழியாப்புகழ் பெற்றவர் முல்லா நஸ்ருத்தீன். திருவள்ளுவரை போலவே முல்லா நஸ்ருத்தீனும் ஒருவர் அல்ல. அது ஒரு குறிப்பெயரே என்று நிறைய ஆராய்ச்சிகள் ஒரு புறம். நஸ்ருத்தீன் எங்க ஊர்காரர்தான்னு சண்டைக்கு வருகிற துருக்கி, அராபிய, பஞ்சாபிய, அல்பேனிய, ஈரானிய மக்கள் ஒரு புறம் இருக்கட்டும். 

நமக்கு தேவை கண்ணாடி குவளை அல்ல, உள்ளிருக்கும் திராட்ச்சை ரசம்.



ஒரு நல்ல பட்டப்பகல் வேளையில் முல்லா நஸ்ருத்தீன் அவர் வீட்டு திண்ணையில் உட்கார்ந்து இருந்தார்.அப்பொழுது அங்கு வந்த ஒரு நாட்டுப்புறவாசி தன்னுடைய கையில் இருந்த ஒரு கடிதத்தை முல்லாவிடம் கொடுத்து , முல்லா இதை கொஞ்சம் படிச்சு விளக்குங்கன்னாரு. முல்லா கொஞ்சம் நேரம் அந்த கடிதத்தையே பார்த்து கொண்டிருந்து விட்டு ,அதை அப்படியே அவர்ட்ட திருப்பி கொடுத்து," அய்யா எனக்கு எழுத படிக்க வரதுன்னார்"..அதுக்கு அந்த நாட்டு புறத்து ஆளு, "என்னங்க ! பார்க்க பெரிய அறிவாளி மாதிரி தலைபாகை எல்லாம் பெருசா கட்டி இருக்கீங்க, படிக்க தெரியாதுன்னு சொல்றீங்களே!'ன்னார் . உடனே முல்லா ,வீராப்பா தலைப்பாகைய கழட்டி அந்தாளுக்கு மாட்டி விட்டு ,இந்த இப்போ நீயும் தான் தலைப்பாகை கட்டி இருக்க , உனக்கு அது படிக்க சொல்லி கொடுத்தா நீயே கடிதத்த படிச்சிகோ'ன்னுட்டு விறுவிறுன்னு வீட்டுக்குள்ள போய்ட்டார்.

நல்ல பனி பொழியுற அர்த்தராத்திரில கும்மிருட்டுல, முல்லா வெளியூர்ல 
இருந்து வீட்டுக்கு நடந்து வந்துட்டு இருந்தாரு. அப்போ அவர பார்த்தா ஒரு தெரு நாயி வள்ளு! வள்ளுன்னு குரைக்க ஆரம்பிச்சது. உடனே முல்லா கீழா குனிஞ்சு அங்க கடந்த ஒரு கல்ல எடுக்க முயற்ச்சி பண்ணினாரு. என்ன கொடுமையோ , கல்லு ரோட்டோட ஓட்டிகிட்டு வரவே இல்லை. முல்லா உடனே, சே! என்ன உலகம்டா இது ! நாய அவுத்து விட்டுறானுங்க , கல்ல கட்டி போட்டுருறானுங்க 'ன்னு புலம்பிட்டே நடக்க ஆரம்பிச்சுட்டார்.

முல்லா அவர் வாழ்நாள் முழுவதும் மிக கடுமையான வறுமையில இருந்தார்.ஒரு நாள் அவரோட அழுக்கு சட்டை, கிழிஞ்ச மேலங்கிய போட்டுட்டு சந்தைக்கு போனாரு எதுனா வேலை கிடைக்குதான்னு தேட.அங்க பார்த்தா ஒருத்தன் பட்டு சட்டை,தங்க பொத்தான்கள் வைச்ச வெல்வெட்டு கோட், சரிகை வேலைப்பாடு செஞ்ச செருப்புன்னு போட்டு ரொம்ப ஜோரா நடந்து வந்து கடைக்காரங்ககிட்ட எல்லாம் பேரமே பேசாமா அப்படியே எல்லாம் சாமானையும் சொல்ற விலைக்கு வாங்கிட்டு இருந்தான். முல்லா ஒரு கடைக்காரர்ட்ட "யாருங்க இந்தாளு? 'ன்னு கேட்க, அவரு இவரு தான்பா "பெமி பாஷாவுடைய வேலைக்காரறு'ன்னு சொன்னாரு ". உடனே முல்லா "இறைவா! என்ன கொடுமை இது, பெமி பாஷாவோட வேலைக்காரன் எப்படி இருக்கான், உன்னுடைய வேலைக்காரன் நான் எப்படி இருக்கேன்"ன்னு சொல்லிட்டு போய்ட்டே இருந்தார்.

நல்ல வாடை காத்து அடிக்குற ஒரு ராத்திரி முல்லா சுகமா வீட்டுக்குள்ள தூங்கிட்டு இருந்தாரு.திடீர்னு வெளிய தெருவுல கூச்சல், குழப்பம் சத்தத்த கேட்டு ஒரு கம்பளிய எடுத்து மூடிகிட்டு வெளிய வந்தார்.பார்த்தா அங்கே யாரையும் காணோம்.என்னடா இதுன்னு, கொஞ்சம் தெருவுல அந்த பக்கம் போய் பார்க்கலாம்னு நடந்தார்.அப்போ அந்த பக்கம் வந்த ஒரு பலே திருடன் டக்குனு, அந்த கம்பளி போர்வைய உருவிட்டு ஓடிட்டான். திரு திரு'ன்னு முழிச்சிட்டே "அட கர்மமே ! இவ்வளவு கூச்சலும் குழப்பமும் என் போர்வைக்கு தானான்னு " நடுங்கிட்டே வீட்டுக்குள்ள போய்ட்டாரு முல்லா.


ஒரு நாள் நதிக்கரை ஓரமா உட்கார்ந்து இருந்தார் முல்லா.அப்போ அவரோட நண்பர் ஒருத்தர் எதிர்பக்க கரைல நின்னுட்டு, முல்லா, நான் எப்படி அந்த பக்கமா வரதுன்னு ?கத்தினாரு. பதிலுக்கு முல்லா அமைதியா, நீ அந்த பக்கமா தான் இருக்கேன்னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டார்.

நிறைய திராட்சை பழக்குலைகளை கையில கொண்டு வந்துட்டு இருந்தாரு முல்லா.அப்போ அங்க வந்த குழந்தைகள் கிட்ட ஒரு குலைல இருந்த பழங்கள மட்டும் பிச்சுபிச்சு கொடுத்துட்டு போக போனாரு, அப்போ ஒரு குழந்தை, ஏன் முல்லா !அதான் அவ்வளவு பழம் இருக்கே, இன்னும் நிறையா எங்களுக்கு கொடுக்கலாம்ல'ன்னு கேக்க முல்லா ,"முழு குலைய தின்னாலும் சரி ஒரு பழத்த தின்னாலும் சரி, ருசி ஒன்னுதான்னு" சொல்லிட்டே கழுதை மேல ஏறி கிளம்பிட்டாரு.



இப்படி நிறைய கதைகள் சொல்லிட்டே போகலாம். சாதரண மக்களிடம் மட்டும் அல்லாமல், பேரரசர்களிடமும் எந்த பயமும் அன்றி அதே பாமரத்தானமான கேள்விகள்-செயல்களின் மூலம் பல்வேறு சிந்தனைகளை ஏற்படுத்தியவர் முல்லா.

ஒரு முறை ஓட்டோமான் பேரரசை வென்ற மங்கோலியத்தலைவன் தைமூர் முல்லாவிடம், "நான் யார் ? என்னுடைய மதிப்பு என்னன்னு தெரியுமான்னு ?" கேட்டான்.அதுக்கு முல்லா "ஒ! தெரியுமே ! 200 வெள்ளி'ன்னாரு. பயங்கர கோபமான தைமூர் "முட்டாளே! நான் போட்டுயிருக்கும் இந்த இடுப்புவார் மட்டுமே 200 வெள்ளி இருக்கும்" சொன்னான். உடனே முல்லா , ஆமா தைமூர், அதேயும் சேர்த்து தான் சொல்றேன்னு நடைய கட்டிட்டாரு.

முல்லா இருந்த அந்த ஊரு ராஜாவுக்கு எப்படியாவது முல்லாவ மட்டம் தட்டணும்னு ஆசை .சரின்னு ஒரு நாள் முல்லாவ தன்னுடையா சபைக்கு வர சொல்லி, முல்லா !இன்னைக்கு உங்களுக்கு ஒரு பட்டம் தர போறேன், என்னன்னா இன்னைல இருந்து நீங்க தான் இந்த ஊரு கழுதைகளின் ராஜா 'ன்னு சொன்னாரு.உடனே முல்லா ரொம்ப சந்தோசங்க'ன்னு சொல்லிட்டு அங்க இருந்த ஒரு வேலைக்காரன்ட்ட ராஜாவோட இருக்கைய விட ஒரு உயரமான இருக்கையா போட சொல்லி ராஜா பக்கத்துலேயே உட்கர்ந்துட்டார். செம கோபமான ராஜா, என்ன முல்லா ,திமிரா ? என்ன தைரியம் இருந்த என் பக்கத்துலேயே உட்காருவன்னு , கத்தினாரு. முல்லா பொறுமையா ,ஹா! அமைதி ! இப்போ நான் உனக்கு ராசாவ இல்லை நீ எனக்கு ராசாவான்னு புன்சிரிப்போடு கேட்டாரு.

இப்படி வாழ்நாள் முழுக்க தன்னுடைய ஏடாகூடமான செயல்களால் மக்களை சிந்திக்க வைத்த முல்லா ஒரு முறை தான் அழுதுயிருக்கிறார்.அது கூட அவரோட கழுதை செத்ததுக்கு. என்ன முல்லா உங்க பொண்டாட்டி செத்ததுக்கு கூட அழுகலியே நீங்க ஏன் இந்த கழுத செத்ததுக்கு போய் அழுவுரீங்கன்னு கேட்டதுக்கு ..என் பொண்டாட்டி செத்தப்போ எல்லாரும் கவலைப்படாதே, இத விட நல்ல பொண்ணா பார்த்து உனக்கு அடுத்ததா கல்யாணம் பண்ணி வைக்கிறோம்னு சொன்னங்கா ஆனா என் கழுதை செத்தப்போ அப்படி யாரும் சொல்லலியே'ன்னு அழுதாராம்.

முல்லா அல்பேனிய, துருக்கிய மக்களால் ஹோஜா (கண்ணியம் மிக்க ஆசிரியர் ) என்று அன்போடு நினைவு கூறப்படுகிறார்.இன்று எத்தனையோ வேறு முல்லாக்கள் வேறு பல காரணங்களால் அறியப்பட்டாலும் எனக்கும் முல்லா என்றவுடன் நினைவுக்கு வருபவர் ஹோஜா அவர்கள் மட்டுமே.

இவருடைய பிறப்பு, வாழ்க்கை, இறப்பு எல்லாமே ஒரு நாடோடியை போன்றே உள்ளது சரியான விவரங்கள் இல்லை. அவருடைய கல்லறை இருப்பதாக சொல்லப்படும் கொன்யாவில் அவருடைய கல்லறை மிக பெரிய கதவுகளால் மூடப்பட்டு இருக்கிறது 
..கதவுகளில் பொறிக்கப்பட்ட வாசகம் 

" சில நேரம் மிகப்பெரிய கதவுகளை கடந்து செல்ல திறவுகோள்கள் தேவைப்படுவதில்லை. தேவைப்படுவது எல்லாம் கதவுகளை சுற்றி ஒரு சிறு நடை தான். ஏன் என்றால் இந்த கதவுகள் எந்த சுவர்களையும் மூடுவது கிடையாது. "


ஆம் உண்மையிலேயே சுவர்கள் அற்ற கதவுகள் தான் சூபிஞானம்


மேலும் முல்லா கதைகள்

Thursday, November 6, 2008

சூன்யக்காரனும் படுகொலைகளும்


உலகின் ஏதாவது ஒரு மூலையில் படுகொலைகளும், அக்கிரமங்களும் நடக்கும் பொழுதெல்லாம் மனம் உளவியல் ரீதியாகவும், அறிவு பூர்வமாகவும், ஆன்ம தேடலுடனும் கடவுள் சார்ந்த கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விடுகின்றது.

முதலில் எதற்காக அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட வேண்டும் ? கடவுளே உலகத்தின் நடப்புகளை தீர்மானிக்கின்றார் என்றால் .... ,
உயிர் கொடுப்பதும் எடுப்பதும் அவன் இஷ்டம் செயல் என்றால்.... ,
நாம் அனைவரும் அவன் கையினில் அகப்பட்ட பொம்மையா ?
இந்த குரூர விளையாட்டு எதற்காக ?.

பிரதிநிதித்துவத்தின் வாயிலாக தன்னை அறிதலுக்காவே ,கடவுள் இந்த விளையாட்டை விளையாடுகின்றார் என்றால், மனித இனத்தை படைத்தது முதல் எத்தனை, எத்தனை கோடானுகோடி உயிர்கள் கடவுளின் இந்த அறிதலுக்காக அழிந்து போய் இருக்கின்றன ?

கடவுள் நம்ம உருவாக்கியது நம்மை நாம் அறிந்து ,கடவுளையும் அறிந்து ஞானம் பெற்று அதன் வாயிலாக ஞானம் பெறாத மக்களை வழிப்படுத்த என்றால் ,எத்தனை லட்சம் ஞானிகள் எத்தனை கோடி மக்களை வழிப்படுத்தி விட்டார்கள்.ஆனால் அடுத்து என்ன நடந்தது ? அதற்க்கு அடுத்து தோன்றிய ஞானம் கெட்ட மனிதனுக்கு இந்த மறைந்து போன ஞானிகளால் என்ன பிரயோஜனம்?
மறுபடியும் ஞானம் தேடுதல், மறுபடியும் ஞானம் கொடுத்தல்... கொடுத்தல், தேடல், கொடுத்தல் ,அழிதல், தேடல் ,........தீராத விளையாட்டு இது...


சரி, இது மாதிரி அல்ல கடவுள். அவன் வினை, எதிர் வினை தத்துவங்களுக்கு அப்பர்ப்பட்டவன் என்றால் இந்த மாதிரி ஒரு வினைகளற்ற , பிடிப்பில்லா கடவுளினால் என்ன பிரயோஜனம் நமக்கு ?

மொத்தத்தில் கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் தான் சுயநலத்தின் பிறப்பிடம் . தன்னுடைய சுயத்தை அறிய நாம் எல்லாம் அவனுக்கு பகடை காய்கள் .

இப்படி எல்லாம் விளையாடி கடைசியில் அவனுக்கு என்ன மிஞ்சுகிறது ??
இப்படி எல்லாம் பூமியில் மனித இனம் தோன்றியது முதல் ஞானம் பெற்ற கோடி ஞானிகள் அவனுக்கு போத வில்லையா ?? இன்னும் எதை அவன் மனம் தேடுகிறது ?
மனம் அற்ற நிலை உடையவன் அவனானால் , எதை கொண்டு அவன் தேடுதல் முழுமை அடையும் ?

முழுமை அடைந்த்தவன் அவன் என்றால் ஏன் இந்த தீராத விளையாட்டு ??

மேலே தோன்றியனா எல்லாம் சமூக அக்கிரமங்கள் , மற்றும் கொடூரங்களை முன் நின்று எதிர்க்க கையாலாகாத்தனத்திற்கு ,சால்ஜாப்பு சொல்ல வந்த கடவுள் பற்றிய தேடலின் கேள்விகள் என்று வைத்து கொள்ளலாம்.

கீழே வருபவை, அதன் தொடர்ச்சியாக கடவுள் சார்ந்த இன்ன பிற மூட தத்துவங்கள் மீது எழும் கேள்விகள்

மாந்த்ரீகம் : இது உண்மை என்றால் ஏன் ஒரு நாட்டின் தலைவனோ , தலைவியோ அவனை எதிர்க்கும் இன்னொருவனுக்கு ஏவல், சூன்யம் செய்தோ அல்லது
வசியப்படுத்தியோ பெரிய போரையும் ,ரெண்டு பக்கமும் நிகழும் வீண் உயிர் , பொருள் இழப்பையும் தடுக்க கூடாது

இது மட்டும் உண்மை'ன்னா ராஜபக்ஷே'க்கு சூன்யம் வச்சு அலேக்கா தமிழ் ஈழத்த வாங்கிடலாமே ...

ஏன் இந்த மாதிரி மந்திர தந்திர வேலைகள் மிகப்பெரிய விஷயங்களுக்கு பயன் படுவதில்லை. நம்ம பக்கத்து வீட்டுகாரகள் , தெரிந்த, தெரியாத அப்பாவி ஜனங்களோடு மட்டுமே தன்னுடைய சக்தியின் எல்லையை நிறுத்தி கொள்கின்றன ?

பேய்,ஆவி : புஷ் உட்பட அமெரிக்க ஜானதிபதிகள் ஒரு வருடத்திற்கு போடும் கொலை ஆணைகள் மட்டும் பல ஆயிரங்களை தாண்டும். எங்கே போகின்றன இத்தனை பேருடைய ஆவிகள்..ஏன் இவை பேயாக மாறி புஷ்ஷையும் , ராஜபக்ஷேய்வையும் , ஆப்பிரிக்க கொடுங்கோல் தலைவர்களையும், சர்வாதிகாரிகளையும் புடித்துக் கொள்வதில்லை ?
இவுங்கள்ட்ட என்ன பயமா ஆவிகளுக்கு ? அப்போ நம்ம மட்டும் இளிச்சவாயனுங்க ஆவிகளுக்கு கூட !!!!!!


வாஸ்த்து, ஜோதிடம், எண் கணிப்பு ஏனையப்பிற : இவை அனைத்துமே ஒரு மிகப்பெரிய வெளியில் விளையாடும் probability விளையாட்டு. நிறைய permutations and combinations. தொண்ணூறு சதவிகிதம் தப்பாகவே நிகழும். மீதி பத்து சரியாக நிகழ்வதும் இந்த தொண்ணூறு சதவிகிதத்தின் எச்சமே. இதை எல்லாம் சரிக்கட்ட இன்னு நிறைய generalizations. எல்லாருக்கும் ஏற்ற ஒன்றை எல்லாருக்குமே சொல்வது . உதாரணம் கிழக்கு பக்க வாசல், 9 நம்பர் ரொம்ப சக்தி வாய்ந்ததுங்க .


செல்வம் கொழிக்கும், அள்ளி தெளிப்பாய் என்று ஆருடம் கேட்ட எத்தனையோ போராளிகள்,அப்பாவி மக்கள் இன்று மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் ஆருடம் சொன்ன ஆசாமிகளோடு .

எத்தனையோ மாந்த்ரீக, தந்திரங்களை தங்கள் வாழ்க்கையோடு பல ஆயிரம் ஆண்டுகளாக பின்னி பிணைந்து கொண்டு, அதனால் நொந்து நசிந்து வாழ்ந்த சீனர்கள், ரஷ்யர்கள், ஐரோப்பியர்கள் எல்லாம் , இன்று இவற்றை கடவுளோடு சேர்த்து பின்னுக்கு தள்ளிவிட்டு உடல்,பொருள் சார்ந்த கோட்பாடுகள் அடங்கிய வாழ்க்கை முறையோடு மிக சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பாவ,புன்னியத்திலான வாழ்க்கையை உதறி விட்டு சரி,தவறுகள் அடங்கிய வாழ்க்கை முறையே மனம் ,உடல் இரண்டிற்கும் நல்லது என்ற தத்துவமே மிக சிறந்தது.

இப்படியான வாழ்க்கை முறை கடவுள் சார்ந்து இல்லாமல் இருப்பதோடு , அதனை சார்ந்து எழும் நிறைய வாழ்வியல் குழப்பங்களையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

ஆனால் This Dilutes the life more and reduces the spiciness and beauty of life.

சுருக்கமாக சொல்லப்போனால் கடவுள் என்ற தூணுக்கு நாம் தேவை இல்லை.
நமக்கு தான் சாய்வதற்கும்,நெடு நேரம் சும்மா நிற்பதற்கும் அது தேவை ...

Sunday, November 2, 2008

தமிழ் சினிமா - இட்லி, கறிக்குழம்பு .



சினிமா கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் உலகத்துல பொறந்த எல்லா தமிழனையும் போல நினைவு தெரிஞ்ச காலத்துல இருந்து தமிழ் சினிமா தான் நம்ம வாழ்க்கையோட பரிணாம வளர்ச்சிக்கு (???) உறுதுணையா இருந்துருக்கு.

நான் பார்த்த படம் மட்டும் ஆயிரக்கணக்கில இருக்கும்.அல்லது நூத்துக்கணக்கில !!!!
ஒரு காலத்துல எந்த படத்த அன்னைக்கு பார்கிறேனோ, அந்த படத்தோட ஹீரோவா அன்னைக்கு ராத்திரி அதே ஹிரோயினியோட, அதே ஷூட்டிங் லொகேஷன்ல கனவுல கும்மி அடிக்குது வழக்கமா இருந்து இருக்கு.

இன்னைக்கு நினைச்சு பார்த்தா எனக்கு நானே கோமாளி பட்டம் கட்டிக்கலாம்.


1.
) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயசு எல்லாம் கரக்கிட்டா தெரியலை ... எங்க வூட்ல எல்லாரும் ரஜினிகாந்த், விஜயகாந்த் பைத்தியங்க. அதுலேயும் எங்க அம்மாவுக்கு ரஜினிகாந்த் படம்' ன்னா உயிர். மொதமொதல்ல மதுரை சென்ட்ரல் தியேட்டர்ல மாப்பிள்ளை படத்துக்கு, தூக்குவாளில இட்லி கறிக்கொழம்பு எல்லாம் கட்டிக்கிட்டு , எங்க பக்கத்து வூட்டு அக்கா, அவுங்க பொண்ணு , எங்க மாமா பையன் எல்லாரெயும் கூட்டிகிட்டு,பெஞ்சு டிக்கெட் வாங்கி அம்மா கூட ரசிச்சு படம் பார்த்தது, எப்போடா இண்டெர்வல் வரும் கறிக்கொழம்போட இட்லி' சாப்பிடுவோம்னு தவிச்சது , சும்மா இருடா அனத்தாமன்னு சொல்லி, எங்க அம்மா முக்கா வாசி இட்லியையும் கறிக்கொழம்பையும் , பக்கத்து வீட்டு பொண்ணுக்கே ஊட்டி விட்டது. நானும் எங்க மாமா பையனும் வெறுப்பாகி அழுது ஆர்பாட்டம் பண்ணி கோன் ஐஸ்கிரீம் வாங்கித்தின்னது (அந்த பொண்ணுக்கு கொடுக்காம ) ,அப்புறம் அடுத்த நாள் ரஜினி மாதிரியே என்னை நினைச்சிக்கிட்டு, கிளாஸ்' இருக்கிற எல்லாருக்கும் கத்திக்கப்பல் செஞ்சதுக்காக, கனகா மிஸ் என்னை சாரி கேக்க சொல்ல , கேக்க மாட்டேன்னு சொல்லி (அவுங்க ஸ்ரீவித்யா நாம ரஜினி 'ன்னு நினைப்பு ) ஓவரா ஹீரோயிசம் விட்டு செம மாத்து வாங்கினது, எல்லாம் எனக்கு மறக்குதோ இல்லையோ , எங்க அம்மாவுக்கும் கனகா மிஸ்ஸுக்கும் மறக்காது .

என்ன உணர்ந்தேனா ?? ஒரு மண்ணும் உணரல ... ..அம்மாகிட்ட அடுத்த படத்துக்கு போறதுக்கு முன்னாடியே கறிக்கொழம்பும் , சோறும் ஒரு தடவ வீட்லியே வாங்கி சாப்பிடனும்'ன்னு தான் அப்போதைக்கு உணர்ந்தேன்.


2)
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
விருமாண்டி....3 தடவ தியேட்டர் ' .. தீவிர ரஜினி ரசிகர்கள் நிறைந்த குடும்பத்துல பொறந்த நானும், எங்க அண்ணனும் வெறித்தனமான கமல் ரசிகர்களா ஏன் மாறினோம் ?எப்படி மாறினோம்'ன்னு ரூம் போட்டு தான் யோசிக்கணும்


3)
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுப்ரமணியபுரம். இந்தியா போனவுடன இந்த படத்த நம்ம ஊர்ல (மதுரைங்க எங்க ஊரு ) தியேட்டர்'லே பார்க்கணும்னு நினைச்சு, அதே மாதிரி ஊருக்கு போயி டிக்கெட் எல்லாம் ரிசர்வ் பண்ணி வச்சு ...அதான் டிக்கெட் இருக்கே, லைட் 'சரக்கடிச்சிட்டு போகலாம்னு தண்ணிய போட்டு வண்டிய ஒட்டி குப்புற விழுந்து படத்துக்கு போகாம ஆஸ்பத்திரிக்கி போனப்போ, இனிமே எந்த படத்துக்கும் ரிசர்வ் பண்ணி டிக்கெட் எடுக்க கூடாதுன்னு உணர்ந்தேன்.


4)
மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

அன்பே சிவம். கமல் கடைசி காட்சியில மழை' நடந்து போகும் பொழுது அந்த நாயும் ஓடி வருமே, அப்போ ரொம்ப நேரம் அழுதுட்டு, உடனே அடுத்த ஷோ'க்கு கவுண்ட்டர்'லே டிக்கெட் வாங்கி வந்து, கடைசி பத்து நிமிஷம் முழுக்க அழுதுட்டே படம் பார்த்தது...

ஏன்ங்க அந்த படம் ஓடலை ?

5.
உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நம்ம ஊரு சினிமா'வும் அரசியலும் ஒன்றோட ஒண்ணு கலந்தது ..
எல்லா படத்துலேயும் அரசியல் இருக்கும்,
அரசியல்ல
எல்லாம் நிறையவே நடிப்பு இருக்கு. இதுல எதை சொல்ல ???

தேவர் மகன் படம் வந்த நேரத்துல எங்க ஊர் முழுக்கு நிறைய கலவரம் அடிதடின்னு ,
அப்போ
ஒன்னும் புரியலை..இப்போவும் புரியலை.

)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ராஜ பார்வை' அந்தி மழை பாட்டுல, கோட்டு ஓவியமா, அப்புறம் ஓவியமா இருந்து , அப்படியே காட்சியா விரியும் ,மரங்களுக்கு இடையில கமல் நிக்கிறது ...இன்னைக்கு வரைக்கும் வேற எந்த படத்துலேயும் அதுக்கு சமமா எந்த காட்சியும் தொழில் நுட்ப ரீதியா மனசுல பதியலை... கவிதையும், கற்ப்பனையும், தொழில் நுட்பமும் ஒரே புள்ளில இணைஞ்ச ஒரு காட்சி அது

6.
தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வேற என்னங்க வேலை. என்னதான் பிரெஞ்சு , இத்தாலியன் படங்கள் எல்ல்லாம் பார்த்தாலும் மூளைக்கு கொஞ்சம் கொஞ்சம் கிளுகிளுப்பு ஊட்ட, நம்ம ஊரு கிசுகிசு, கசமுசா, எல்லாம்
கரெக்ட்
' ட்டா படிச்சிருவோம்.

7.
தமிழ்ச்சினிமா இசை?
தமிழ் சினிமா இசை' பத்தி ஒரு ரசிகனா என்னோடு கருத்து என்னனா .........
ஒன்னும் இல்லைங்கா

ரொம்ப சோகம் இல்லாத, கேட்டா கொஞ்சமாவது உற்சாகம் கொடுக்குற எல்லா பாட்டையும் கேப்பேன்..
திருவாசகமும் பிடிக்கும், டாக்ஸி டாக்ஸியும் பிடிக்கும்

உலக இசை பத்தி சொல்ல நிறையா இருக்கு.
ஒரு
நைட் கிளப், ராக் ஷோ விடாம போயி பார்த்து சரக்கு அடிக்குறோம்ல.

8)
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஒரு
காலத்துல எங்க அப்பாகூட சேர்ந்து மௌன்ட் ரோடு' (மலையாள படமா போடுவாங்களே என்ன தியேட்டர்'ன்க அது, பேரு மறந்து போச்சு ) மம்மூட்டி, மோகன்லால் நடிச்ச நிறைய படம் பார்த்துருக்கேன் ...உபயம் அப்பாவின் மலையாள நண்பர்கள் ..
ஆனா ஒரு படமும் மனசுல நிக்கலை..ஏன்னா முக்கா வாசி படங்கள், நான் நேர்ல பார்த்த வாழ்க்கைய வேற கலாச்சாரப் பின்னணியோட திரைல பார்க்கிற மாதிரி இருக்கும்.

நம்ம தமிழ் படம் மாதிரி ,ஹீரோ பதினாறு பெற சட்டைல அழுக்கு படாம அடிச்சி தூள் கிளப்பிட்டு, ஹீரோயின்னோட அண்டார்டிகா' ஜகஜமா ஒரு சட்டை மட்டும் போட்டுட்டு, அந்தம்மா அது கூட இல்லாம பாடிட்டு இருந்தா மனசுல நின்னுருக்கும்.

ஹிந்தி படங்கள் நிறைய பார்த்தேன், பார்கிறேன். என்ன சுத்தமா யோசிக்கவே வேண்டியது இல்லை ஜாலியா படம் பார்த்துட்டு தியேட்டர்'க்கு வெளில வந்தா எல்லாம் மறந்து போயிடும்.

இப்போ சீன, கொரிய மொழி படங்கள் அதிகம். இந்த படங்களா எல்லாம் பார்க்கும் பொழுது தோணுறது ஒன்னே ஒன்னு தான், நம்மக்கிட்ட இத விட சொல்லப்பட வேண்டிய அற்புதமான கதைகள், தளங்கள், களங்கள் கொட்டி கிடக்கு...
என்ன ரூம் போட்டு யோசிக்காம ஊற சுத்தி பார்த்தா போதும்

பிரெஞ்சு , இத்தாலியன் , ரஷ்ய படங்கள் என்னமோ இப்போ பார்க்கிறது இல்லை ..ரொம்ப யோசிச்சு படம் எடுத்து நம்மலேயும் குழப்பி , அவனுங்களும் குழம்பி கடுப்பேத்திறானுங்க.பாதி இத்தாலியன்,பிரெஞ்சு , ரஷ்ய பட டைரக்டர் கள் ஏன் தற்கொலை பண்ணிக்கிறானுங்க'ன்னு இப்போ புரியுது.


9)
தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சிறிய தொடர்பு உண்டு. ஒரு படத்தயாரிப்பாளரோட மூணாவது நண்பரோட, நாலாவது நண்பர் என்ற முறைல.
சினிமா எடுக்க வேண்டிய learning by observing நிறைய இருக்கு ...
கூடிய சீக்கிரம் கொஞ்சம் மரை களண்டு , பார்க்கிற நல்ல வேலைய விட்டுட்டு இந்தியா' எதுனா ஒரு டைரக்டர்' கிட்ட .டி யா அழுக்கு ஜீன்ஸ் போட்டுகிட்டு , சோறு தண்ணி இல்லாம குப்பை கொட்டப் போறேன்னு , நிறைய பேரு WARNING message அனுப்பிட்டு இருக்காங்க.


10.
தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னங்க காமெடி பண்றீங்க ??? எம்.ஜி.யார், சிவாஜி இல்லைனா ஒரு காலத்துல தமிழ் சினிமா'வே இல்லைன்னு இருந்தது.
ஆனா அவுங்க அவ்வுலகம் சென்ற பின்னாடி,
இவ்வுலகத்துல தமிழ் சினிமா இல்லாமையா போயிருச்சு

எதிர்காலம் புதிர்காலம்'ன்னு காமெடி பண்ணாதீங்கப்பா

11.
அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நமக்கு பிரச்சனை இல்லை ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு'ன்னு வேற மொழி படம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். தமிழர்கள் நிலை என்னன்னு சொல்றது.???
இப்போவே நிறைய பேரு தியேட்டர்'க்கு போயி தமிழ் படம் பார்க்கிறது இல்லை.
எல்லாம் டி.வி.டி தான்...

வழக்கமா இங்கிலீஷ், ஹிந்தி படமா ஓட்டுற மல்டிப்ளெக்ஸ்' எல்லாம் எங்கள மாதிரி வாலிப வயசு பசங்க கூட்டம் வழக்கம் போல் நிரம்பி வழியத்தான் போகுது .

ஆனா நம்ம ஊரு அரசியல் வாதிங்க எல்லாம் பக்கவாத நோய் வந்த மாதிரி நொந்து போயிருவாங்க.

நம்ம முதல்வருக்கு நிறைய நேரம் மிஞ்சும். என்ன பண்ணுவாரு ?? குடும்ப சண்டைய தீர்த்து வைப்பாரா ? இல்லை கரண்ட் கட் ஆகம இருக்க திட்டம் போடுவாரா ? இல்லை M.p வாபஸ் , வாபஸ் இல்லை'ன்னு கேம் விளையாடுவாரா ?

கேப்டன் னுக்கும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே அவர் படம் நடிக்கிறதும், அதை மத்தவங்க பார்க்கிறதும் கம்மி தான்.

இந்த மாதிரி தமிழ் வளர்ச்சிய கெடுக்கிற மாதிரி கேள்வி கேட்டதுக்கு மருத்துவர் அய்யா , திரு.மா கிட்ட எல்லாம் உங்கள ஏன் போட்டு விட கூடாது ???


அப்பாடி ஒரு வழியா எல்லா கேள்விக்கும் பதில் எழுதியாச்சு !!!
அடுத்த தடவ கேள்வி கேட்டா "choose the best answer"மாதிரி சொகுசா கேளுங்கப்பா

யார்ட்ட அடுத்து இத ரவுண்டு விடலாம்னு பார்த்தா, நான் ரசிச்சு படிக்கிற வலை உலக பெரியவங்க எல்லாம் ஏற்கனவே இதை பத்தி எழுதிட்டாங்க.

நீங்க பதில் சொல்லுங்கன்னு சின்னப் பசங்கள்ட்டா கேள்வி கேக்குற அளவு, நான் பெரிய ஆள் இல்லை.

அதுனாலா எல்லா MLM 'ம்க்கும் கடைசில நடக்கிற கதைப்படி இதை இத்தோடா முடிச்சுக்குறேன்...

ஆட்டைய்யை
கலைசாச்சி டோய் , டும்! டும்! டும் .

Thursday, October 16, 2008

எப்படி எழுதுறானுங்க ?


ஆயிரத்தெட்டு வழி இருக்கு இன்னைக்கு எழுத. செரி நாமளும்
எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை. அதுக்காக ஒரு வலைப்பூவும் துவங்கியாச்சு.
ஆனா பல நேரம் என்ன எழுதுறதுன்னோ ,அல்லது எதுக்கு எழுதனும்னோ தோணுது

வாழ்க்கைல சுவாரசியம் இல்லாம இல்லை, அல்லது அனுபவத்துக்கும் பஞ்சம் இல்லை. ஆனா அதெல்லாம் ஏன் உன் எழுத்துல கொண்டு வரலைனா சொல்ல தெரியலை.

நிறைய பேரோட எழுத்துக்கள, புத்தகங்கள படிச்சி இருக்கேன்.
சும்மா ஒரு நூல் பிடிச்சபிலையோ அல்லது பல கலர் நூல கலந்து புடிச்சாப்பலையோ , நிறையவோ, கொஞ்சமாவோ எழுதிட்டு போயிறாங்க. படிக்கவும் நல்லா இருக்கு.


சிலர் வீடு மாத்தினது, புது வீடு எப்படி இருக்குதுன்னு எழுதுறாங்க.

சிலர் டாஸ்மாக்'ல கூட்டாளிகளோட தண்ணி அடிச்சத கொஞ்சம் பழைய காதல் தோல்வியோட கலந்து கவிதையா அழகா கதையா எழுதுறாங்க.

சிலர் புதுசா வந்த இளவயது காதலி பத்தியும், ஊடல் கூடல்கள பத்தியும் அற்புதமா எழுதுறாங்க.

சிலர் தான் கண்ட அல்லது சொல்லக்கேட்ட காமத்தை பத்தி தெளிவா எழுதுறாங்க.

சிலர் தான் பார்த்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள, காயங்கள கொடுரங்கள எழுதுறாங்க

சிலர் சும்மா ஊற சுத்தி பார்த்து அத எழுதுறாங்க

சிலர் திரைப்பட விமர்சனமா எழுதுறாங்க

சிலர் எல்லாத்தை பத்தியும் அழகா குறிப்புகள் மாதிரி எழுதுறாங்க

சிலர் குளிக்கிறத பத்தி கூட எழுதுறாங்க

சிலருக்கு தொழில்நுட்பம், சிலருக்கு இசை , சிலருக்கு இச்சை , சிலருக்கு மொழி தத்துவம், சிலருக்கு கவிதை , சிலருக்கு மொக்கை , சிலருக்கு மதம் , சிலருக்கு மதவெறி , சிலருக்கு சமையல், சிலருக்கு சிந்தனை , சிலருக்கு பிரச்சாரம் ,சிலருக்கு பல விஷயங்கள் , இப்படி எத்தனையோ பல விஷயங்கள் எழுத இருக்கின்றன சிலருக்கு

எல்லாமே நிச்சயமாக எனக்கு ஏற்படுறமாதிரி விஷயங்கள் தான்
ஒரு சிலத படிக்கும் பொழுது, அட நம்ம சொல்ற மாதரியே இருக்கேன்னு தோணுது

ஆனா இதை அதை எல்லாம் ஏன் நான் எழுதலை ?

இந்த கேள்விக்கு எனக்கு நானே பல நேரம் சொல்லி, எழுத தோன்றிய எல்லாவற்றையும் எழுதாமல் விட்ட காரண பதில் ஒன்னே ஒன்னு தான்.

எதை நான் புதிது ,அறிவானது, அழகானதுன்னு எழுதினாலும் அது உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அரதப்பழசான, சொல்லி சொல்லி அலுத்து போன கதையாகத்தான் இருக்கும்.

அதை வேற எதுக்கு திருப்பி சொல்லணும்?

அப்படிப் பார்த்தா இங்க வாழ்ற பல மனுஷங்க ஏற்கனவே எவனோ ஒருத்தன் வாழ்ந்த்துட்டு போன வாழ்க்கைய தானே வாழ்ந்துட்டு இருக்காங்க

ரொம்ப புதுசா தான் மட்டுமே அனுபவிக்கிறதா, அழுகுறதா, சிரிக்குறதா நினைச்சு.


அப்ப ஏன் அதே வாழ்க்கைய ரொம்ப தனித்துவம் வாஞ்சதுன்னு சொல்லி திரும்ப திரும்ப வாழனும் ?

பதில் யார்கிட்ட இருக்கு வார்த்தைகள் இல்லாமல் நிதமும் நம்ம வாழ்க்கையோட கலந்து உறைஞ்சி போன இந்த கேள்விக்கு ???




P.S:
இருந்தா கொஞ்சம் எழுதுங்களேன்.


Thursday, September 25, 2008

காதல்'ன்னு ஒரு எழவும் கிடையாது

காதல்'ன்னு ஒரு எழவும் கிடையாது
சொன்னவர் பொய்யன்
அவருக்கு சொன்னது MR. ராமசாமி (பெரியாருங்க )
அத பார்த்து உங்களுக்கு சொன்னது நான்
நீங்க ?

சொன்ன மேட்டரு இங்க



நன்றி:
பொய்யன்.
இட்லி வடைய போட்டு வறுத்த மாதிரி என்னை வருத்துறாதீக !!!

Thursday, September 18, 2008

ஹே! ராம் ! - ஹிந்து முஸ்லீம் வன்முறை, கலவரக் கொடூரத்தின் சாட்சி. - தொடர்ச்சி.



திரும்ப ஹே-ராமிற்கு

இப்படியாகத் தொடர்கிறது இந்த பலி விளையாட்டு,காளிக்கும், அல்லாஹ்வுக்கும் ஏற்பட்ட இந்த மாய ரத்த பசி தீரும் வரை தாராளமாக பலி கொடுக்கின்றனர் மக்கள், அடுத்தவர் உயிர்களையும் , குழந்தைகளையும், பெண்களையும், வழமையாக கொடுக்கும் மிருகங்களுடன் சேர்த்து.

சில மணி நேரங்கள் ராமன் ராவணன் ஆகிறான், மன சாந்திக்காக கொஞ்சக் கொலைகள் , பித்தத்தில் கொஞ்சக் கொலைகள் செய்து . பின்னாளில் எவ்வளவு முயன்றும் அவனால் இந்த நினைவுகளில் இருந்து தப்ப இயலவில்லை. காரணம் ராமன் ஒரு நடுத்தர மனிதன்,அவன் காசுக்காக கொலை செய்யும் அன்றாடங்காச்சியோ, அல்லது குல சுத்தத்துக்காகவும், கொள்கைக்காகவும் கொலை செய்யும் மதவாதியோ இல்லை. எந்நாளும் அன்பை பொழியும் குடும்பமும் , காதல் தரும் ஆதர்ச மனைவியும் அமைந்தும் கூட இந்த பழியும், உணர்வும் முக்கி எடுத்த அமிலக்கரை போல அவனை விட்டு அழிய மறுக்கின்றது.
பலியும் அவனே! பலி கொடுக்கபட்டவனும் அவனே !


குஜராத்திலும் , காஷ்மீரிலும் ,ஈராக்கிலும், பாலஸ்த்தீனத்திலும் , பாகிஸ்தானிலும், மியன்மாரிலும், ஆப்பிரிக்காவின் அனேகமாக அனைத்து தேசங்களிலும், லட்சோப லட்சம் ராமன்கள் வாழ்வின் மன அமைதியை தொலைத்து விட்டு, திரும்ப இயலாத பாழ் இருவெளிக்குள், கொலை கூச்சல்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு இதை விட்டுத் திரும்ப வாய்ப்பும் இல்லை, அன்பையும், காதலையும் தர குடும்பமும், மைதிலியும் இல்லை...

அவர்களின் தலைவர்கள் அவர்களுக்கு வாக்களித்த அவர்களின் ஒரே விடுதலை திரும்ப இந்த கொடூர நிலையிலும், தொடரும் உயிர் பலியிலும் தான் உள்ளது.

இந்த கொலைக்களங்களும் பிற இனத்தை அளிக்கும் பரிசோதனைக் கூடங்களும் பூமிக்கு ஒன்றும் புதிதல்ல. எத்தானையோ முறை இப்படி இந்த பலி நிகழ்ந்து இருக்கிறது வரலாற்றில் ..எத்தானையோ முறை லட்சகணக்கான முஸ்லிம்கள், யூதர்கள்,கிருத்தவர்கள்,ஹிந்துக்கள் என்று அடையாளம் பூசப்பட்ட மக்களின் உய்ரிகள் உடைமைகள் அழிக்கப்பட்டன ..

பலி தான் அதிகமாகியதேத்தவிர, பலி கேட்ட கடவுள்களின் தாகமோ, பசியோ அடங்க வில்லை.

சரி இந்த கொலைகாரக் கடவுள்களை விட்டு விடுவோம் .அப்படியாவது இந்த பலி நிற்கட்டும் என்று பார்த்தால் கிளம்பி கொண்டு வந்து நிற்கின்றன வர்க்க பேதங்கள்.

பன்னாட்டு முதலாளித்துவம் ஏழைகளின் குருதியில் கிடைக்கும் போதையை, லாபத்தை விட தயாரில்லை.ஏழைகளும், தன்னுடைய உரிமையை முழுவதுமாக விட்டு கொடுக்க போவதில்லை. பணக்கார இனத்திற்கும், அதன் நிரந்தர லாப மூட்டையும் பகையுமான அடித்தட்டு இனத்திற்கும் நில்லாத , ஓயாத சண்டை உலகின் மூளை முடுக்குகளில் எல்லாம்.


ஒரு இன அல்லது வர்க்க மக்களை அழிப்பதன் மூலம் ,சுத்தமான ஒரு சமுதாயத்தை படைத்து விட முடியும் அல்லது, அவர்களை அடிமைகளாக்கி நிச்சயமான ஒரு ஆதிக்கத்தை அடைந்து விட முடியும் என்று நினைப்பவர்கள் மடையர்கள்.

இந்த இனம் அழிந்தால் இன்னொரு இனம் வரும் போராட, இந்த மதம் அழிந்தால் இன்னொரு மதம் வரும் எதிர்க்க, இந்த வர்க்கம் அழிந்தால் இன்னொரு வர்க்கம் வரும் சண்டைக்கு , இது உலகம் தோன்றியது முதல் நடந்து கொண்டு இருக்கும் ஒரு தொடர் விளையாட்டு.

உன்னுடைய மதத்தில் , இனத்தில்,குழுவில், வர்க்கத்தில் இருந்தே வருவார்கள் எதிர்ப்பாளர்கள்
முந்தைய அல்லாத மற்ற மதத்தை விட கடுமையாக எதிர்ப்பார்கள் உன்னை.
என்ன செய்ய முடியும் உன்னால்?

ஆதி காலத்தில் எத்தனை மதங்கள், எத்தனை பேதங்கள் இருந்தன?. பழைய மதத்தின் உள்ளுக்குள் இருந்தே பிரிந்து வளர்ந்து வந்தது தான் அத்தனை புதிய மதங்களும்.

இப்படி வந்த எல்லா மதவாதிகளும் சொல்லி வைத்தாற்போல் கேட்பது பலி .
ஏன் இந்த பலி ? மாறுபட்ட மதங்கள் தான் பலி கொடுக்க தூண்டுபவர்களின் பிரச்சனையா ? இது எப்படியென்றால் உன்னுடைய வீட்டில் பிறக்கும் உன் சகோதரன் , உன் வீட்டில் கொடுக்கும் சைவ உணவினை ஆண்டாண்டு காலமாக உண்டு வளர்ந்து, பின்னாளில் வேற ஒரு புது வீட்டிற்கு போய் தனது காதலியுடன் ,கறி சோறு தின்று கொண்டு இருந்தால் அது பாவம் என்று அதற்க்காக அவனைக் கொலை செய்து தீர்வு காண்பதை போன்றது . நாளை உன் மகன் அதே தவறை செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம் ?

மதம் மாறுவது முழுக்கத் தவறு என்பது முட்டாள்த்தனம். உனக்கு பிடித்த இனிப்பு எனக்கு பிடிக்காது, எனக்கு பிடித்த புளிப்பு உனக்கு பிடிக்காது. அதுவும் இன்று தான் நாளை இந்த பிடித்தல் கூட மாறும் அது போலத்தான் மத மாற்றமும். அது மனதால், அறிவால் ஏற்படுதல் நலம் . காசுக்காகவும் பயத்திற்க்காகவும் மதம் மாற்ற பட்டால் ,அதன் மூல மதம் மாற்றுபவன் அடைவது என்ன? தன் மதத்திற்கு எண்ணிக்கை கூடுமே தவிர, இந்த மாதிரி கொள்கை அற்று மதம் மாறுபவர்களால் ஒன்றும் யானை பலம் வரப்போவது இல்லை. வரப்போவது எல்லாம் யானை விட்ட குசுவிற்கு சமானம். கொஞ்சம் நேரம் நீடிக்கும், அதுவும் கெட்ட வாசம் தான்.

சிந்தித்து பார்த்தால் எந்த கொள்கையும் வந்து எவனுக்கும் சோறு போட போவதில்லை.உழைப்பை தவிர! வேண்டுமானால் கூலிக்கு மாரடிப்பவர்களுக்குக் கொஞ்சம் காசு கிடைக்கலாம் ,ஆனால் அதுவும் நிலை இல்லாத ,நிம்மதி இல்லாத காசு. வட சென்னையின் குப்பத்து மக்களுக்கு தெரியும் நிம்மதியான காசின் அருமை.
இப்படி ஒரு வருமானத்தை தன்னுடைய மக்களுக்கு அளிப்பது அரசாங்கத்தின் கடமை

அப்படி அது தவறும் பட்சத்திலேயே கடவுள்களும் மிருகங்களும் பசியால் முழித்து கொண்டு பலி கேட்கின்றன

Monday, September 8, 2008

ஹே! ராம் ! - ஹிந்து முஸ்லீம் வன்முறை, கலவரக் கொடூரத்தின் சாட்சி.

ரத்தத்துளிகள், மீண்டும், மீண்டும் கழுத்து நாளங்களை உடைத்துக்கொண்டு முகத்தில் தெறித்து விழுகின்றன . காதலோடு , ஆவலுடன் மூழ்கிய பொழுது உடலை காமத்தினால் சுட்டெரித்த அபர்ணாவின் ரத்தம் , இன்று ராமன் முகத்தில் தீராத கரையாய் வன்முறையின் அடையாளங்களோடு..

ஹே ராமில் வரும் இந்த காட்சி கலவரங்களில் பலியான சொல்லப் படாத , முகம் தெரியாத நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கும் மனித நேயத்துக்கும் ஒரு சாட்சி.






இந்த
காட்சியைப் பார்க்கப் படத்தை கிளிக்கவும்

சாகேத்
ராம் ஒரு சாதாரண நடுத்தர வாசி . மனதை நிறைக்க அழகான அன்பான காதலியாக அமைந்த மனைவி , வயித்தையும் மூளையையும் நிறைக்க நல்ல ஒரு வேலை என்று நிம்மதியாக வாழும் சாகேத் ராமின், நிகழ்கால வாழ்விற்கும், வருங்கால வாழ்விற்கும் என்றுமே தீராத சாபமாய் வந்து அமைகிறது அந்த நாள்.


முஹம்மது அலி ஜின்னா பாகிஸ்தான் பிரிவினைக்காக மக்களை (குறிப்பாக முஸ்லீம்'களை) நேரடி நடவடிக்கைக்காக தெருவில் இறங்கச் சொன்ன நாள் (Direct action day ). சீக்கிரமாகவும் சுமுகமாகவும் நடக்க வேண்டிய பிரிவினையை, காந்தியும் காங்கிரசும் முட்டாள் தனமாக நேரம் தாழ்த்தி விபரீதத்தை வளர்த்து கொண்டிருந்த காலம். பிரிட்டிஷ் அரசும் ஒரு நிரந்தர நஷ்டத்தை பாரதத்திற்கு வெகு சாமர்த்தியமாக, நிதானமாக ஏற்படுத்தி கொண்டு இருந்த காலக்கட்டம்.

நேற்று வரை அன்பான உபசரிப்புகளுடனும் , வாய் சண்டைகளுடனும் இருந்த சமூகங்களுக்கு இடையில் பிரிவினை திரி கொளுத்தி போட்ட நாள்.

ஆரம்பிக்கின்றது கலவரம்.


கடைத்தெருவில் ஒரு சீக்கியப்பெண்ணை கலவரக்காரர்களிடம் இருந்து காப்பாற்றும் ராமன் ,வீட்டிற்கு வரும் பொழுது ஒரு முஸ்லீம் குழு தன் வீட்டிற்குள் நுழைவதை காண்கிறான்.

ராமன் (கமல்) தாக்கப்பட்டு ,அவன் ஒன்றும் செய்ய இயலாத நிலையில், அவன் மனைவி (அழகான ராணி முகர்ஜி) கற்பழிக்கப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு ராமன் முகத்தில் அந்த ரத்தத்துளிகள் தெறிக்க தெறிக்க உயிரை விடுகிறாள்.தீராதக்கறை ஆகிறது ராமனின் வாழ்க்கை

இடு இணை இல்லாத இழப்பை , நிமிட கணங்களில் அநியாயக் கொடுமைக்கு பலி கொடுத்த சாமான்யன் அடையும் உன்மத்த நிலையை அடைகிறான் ராமன். அவனுக்கு தேவை பலி உயிர்ப்பலி. தன்னுடைய உயிரினும் மேலான ஆத்மாவை அழித்த மிருகங்களின் உயிர்ப்பலி.

கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டு கொல்கிறது அவன் துப்பாக்கி... அவன் மனைவியை கற்பழித்த டெய்லரை சுடும் பொழுது அந்த டெய்லர்," சார் ! தப்பு நடந்துருச்சு சார், தெரியாமப் பண்ணிட்டேன் சார்! எல்லாரெயும் போல வெறி புடிச்சு பண்ணிட்டேன் சார்! மன்னிச்சுருங்க சார்! சுத்தி எல்லாம் இப்படித்தான் , இருக்கிற எல்லாரும் இதைத்தான் பண்றாங்க! அதுனால நானும் பண்ணிட்டேன் சார், மன்னிச்சுடுங்க சார்! "ன்னு கத்த கத்த ராமனால் சுடப்பட்டு சாகிறான்.. ராமனை இந்த கொலையைச் செய்ய வேண்டாம் ,எனத்தடுக்க வரும் ஒரு வயதான முஸ்லீம் பெரியவரையும் கொல்கிறான்.

இடையில் வரும் காட்சியில் , தெருக்களில் சீக்கியர்கள்," நாங்கள் ஒன்றுமே தவறு செய்யவில்லை ..வீட்டில் தான் அமைதியாக இருக்கிறோம்," என்று கெஞ்சும் ஒரு வயோதிக முஸ்லிம்மை ,அவர்களின் கால்களை அவர் பிடித்து கெஞ்ச கெஞ்ச, வெட்டிக்கொல்கின்றனர் . அவரை நோக்கி ஓடி வரும் அவர் குழந்தையை நெருப்பில் போட்டு எரிக்கின்றனர்.

இன்னொரு வயதான முஸ்லீம் பெரியவரை ராமனைப் போலவே உன்மத்த நிலையில் இருக்கும் ஒரு இந்து சிறுவன் நிதானமாக கத்தியால் குத்தி கொண்டு இருக்கிறான்.ராமனை கண்டவுடன் அவனை முஸ்லீம் என்று தவறாக எண்ணி மன்னிப்பு கேட்டு தன்னை விட சொல்லி கெஞ்சி ஓடி மறைகிறான். அந்த முஸ்லீம் பெரியவர் சாகும் பொழுது தன்னுடைய வீட்டிற்குள் ஒளிந்து இருக்கும் தன் பேரக்குழந்தையிடம் , "கவலைப்படாதே, நம்மை காப்பாற்ற ஒருத்தர் வந்து இருக்கிறார்' ன்னு சொல்லிக் கொண்டே உயிரை விடுகிறார்.

ராமன் அந்த குழந்தையை கொல்லும் நோக்கில் உள்ளே செல்ல, அங்கே ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண் குழந்தை தன்னுடைய தாத்தா கொல்லப்பட்டது அறியாமல்,அவரைத் தேடித் துழாவிக் கொண்டே வருகிறது ..ராமன் அக்குழந்தை தன்னைத் தொடாமல் இருக்க அதனிடம் இருந்து விலகி விலகி அந்த வீட்டை விட்டு ஓடுகிறான்.

ராமனின் இந்த உன்மத்த நிலை தொடர்வது ஒரு சில மணி நேரங்களே..ஆனால் அதற்குள் அவனுடைய வாழ்நாள் முழுவதற்கும் தீராத குற்ற உணர்ச்சிக்கும், பரிதாபர்த்திக்கும், நடுக்கத்திற்க்கும் இந்த சில மணி நேரங்களில் அவன் காட்டும் மிருகத்தனம் அவனை ஆளாக்கி விடுகின்றது.


இந்தக் காட்சிகளை வெறும் சினிமாவாக மட்டுமே முன்னிறுத்தி சிந்திக்கையில் ஆயிரம் ஆயிரம் குறியீடுகளையும் அர்த்தங்களையும் வெளிபடுதக்கூடிய காட்சிகள் இவை.

சமூகக்கொடூரத்தை பார்க்கும் ஒரு சாட்சியாளனாக உற்று நோக்கி ஆராய்கையில், எந்த ஒரு சாதரண மனிதனுக்கும் அவனுடைய வாழ்வின் ஒரு சில மணி நேரங்களில் பெரும் இழப்பின் அல்லது மிகுந்த மகிழ்ச்சியின் காரணமாக இந்த பித்த நிலை ஏற்படுகின்றது.

இந்தக் கணங்களில், அவன் தன்னை, மனிதன் என்ற நிலையில் இருந்து ஒரு மிருகக் கடவுளரை (beastial God ) போல் அனைத்து மானிடப் பதர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் வல்லமை பெற்றவனாக நினைத்து கொண்டு பெரும் ஆவேசத்துடன் எண்ண இயலாத செயல்களில் இடுபடுவார்கள். அல்லது தனக்கு ஏற்பட்ட இழப்பிற்கு ஒட்டு மொத்த சமுகத்தினிடம் இருந்து வட்டியும் முதலுமாக திரும்பப்புடுங்கும் வெறியான பைத்திய நிலை.

சர்வாதிகாரிகளுக்கும் மதவாதிகளுக்கும் இதே மனநிலை, அவர்களின் வாழ்நாள் முழுக்க இருக்கிறது. ஆனால் இப்படி தன்னுடைய பேச்சு ஆற்றலாலும், எழுத்தாலும் அன்றாடங்காச்சிகளையும் , நடுத்தர மனிதனையும் தூண்டி விட்டு வெறியாட்டங்களில் ஈடுபட வைத்து, அவர்களின் வாழ்க்கையை முழுமையாக திசை மாற்றும் இந்தத் தலைவர்கள் பின்னாட்களில் தன்னுடைய பேரன், பேத்திகளுடனும், குடும்பத்துடனும் இந்த செயல்களுக்கு சம்பந்தமே இல்லாத இடங்களில் மகிழ்ச்சியாக குற்ற சுவடின்றி கழிக்கிறார்கள். இல்லை வேறொரு சர்வாதிகாரியின் சிறைச்சாலைகளில் புத்தகங்களுடனும் தியானத்துடனும் மென்மையாக மரணத்தை எதிர் நோக்கின்றனர்.

- தொடரும்

direct action day 1. 2.
hey ram university of iowa review
hey ram -An indepth analysis

(நண்பர்களே உங்கள் கருத்தைப் பின்னூட்டத்தில் பதியுங்கள் )

Sunday, September 7, 2008

சீனால தியேட்டர்ல படம் - THe incredible HULK


வந்து ஆறு மாசம் ஆச்சு, இன்னும் ஒரு படத்துக்கு கூட போகலை. இது தமிழனா பொறந்த நமக்கு எவ்ளோ பெரிய அவமானம்'னே?

டேய் வந்து 8 மாசம் ஆச்சுடா! அப்படியே படத்துக்கு போறதுன்னா என்ன படத்துக்கு போறது ? எல்லா தியேட்டர்'லயும் சைனீஸ் ,கொரியன் படம் தான் ஓடும் . இல்லேன்னா ஹாலிவுட் படத்தையும் டப்பிங் பண்ணி சைனீஸ்'ல காட்டுவானுங்க, ஒரு மண்ணும் புரியாது.

நமக்கு இன்னைக்கு நைட்டுக்கு எப்படியும் ஒரு படத்துக்கு போயி ஆகணும்.. அண்ணே கலைக்கு ஏது மொழி, சாம்பாருக்கு எதுக்கு புளி? அது ! இதுன்னு, மொக்கைய போட்டு கடைசியா அண்ணன ஒத்துக்க வச்சாச்சு

நேரா மல்டிப்ளெக்ஸ் கவுன்ட்டருக்கு போனோம்..ரெண்டு சீனக்காரிங்க, வாங்கோ ! வாங்கோ வணக்கம்'ன்னு , அன்ப பொழிய ஆரம்பிச்சாளுங்க.

மொதல எங்க ரெண்டு பேருக்கும் சீன மொழி பேச வராது ,சீனாக்கரங்களுக்கு இங்கிலீஷ் கிலோ என்ன விலை தான் ?...

எப்படி எந்த படம் எந்த ஷோ'ன்னு சொல்றதுன்னு முழிச்சிட்டு இருந்தப்போ அப்பாடின்னு கவுன்ட்டற சுத்தி படங்களோட போஸ்டர் ஒட்டி இருந்தானுங்க ! hulk போஸ்டர் உட்பட.

ரொம்ப புண்ணியமா போச்சுடா சாமின்னு, கவுன்ட்டர் அம்மணிகிட்ட கைய காமிச்சு , அவள திரும்ப சொல்லி அண்ணன் ஓடி போயி hulk போஸ்டர்ர தொட்டுட்டு அங்க இருந்து ௨'ன்னு கத்தினாரு ... திரும்பி வேகமா கவுண்டர்கிட்ட ஓடி வந்து, டிக்கெட்ட கேட்டா அவ வேற ஒரு படத்தோட டிக்கெட்டு ரெண்ட கொடுத்தா. அண்ணன் கடுப்பாகி, திரும்பவும் ஓடி பொய் தொட்டு காமிக்க, திரும்பவும் வேற படம் இப்படியே 3 தடவ நடந்துருச்சு..

இம்புட்டேயும் நான் கவுண்டேர்'ல நின்னு ரசிச்சு பார்த்துட்டு இருந்தேன்..
என்ன பிரச்சனைனா அண்ணன் தொட்ட hulk போஸ்டர் வலது பக்க ஓரமா இருந்தது. அந்த கவுன்காரி பார்க்கும் பொழுத்து hulk படத்தோட பக்கத்து போஸ்டர் வரைக்கும் தான் தெரியும், கூடவே அண்ணன் தெரிவாரு, ஆனா hulk போஸ்டர்ரோ அதை காட்டுற அண்ணன் கையோ தெரியாது ... கவுண்டர் ஸ்க்ரீன் மறைச்சிகிரும்.

நான் வந்து ,அண்ணே என்ன ஒளிஞ்சி பிடிச்சி விளையாடுறீங்களா அம்மணியோட?'ன்னு கேட்க , அண்ணன், டேய் ! நானே கடுப்புல இருக்கேன், படமே வேண்டாம், வா சரக்கு அடிக்க போலாம்'ன்னு டென்ஷன் ஆகிட்டாரு.

நான் அப்புறம் அண்ணே இது தான் பிரச்சினைன்னு உண்மைய சொல்லி அந்த அம்மணிய கையோடு இழுத்துக்கிட்டு போயி hulk 'க காமிச்சோம்..

ஒரு வழியா அம்மணி புரிஞ்சிக்கிட்டு 2 டிக்கெட்டு நைட் 10.30 மணி ஷோவ்வுக்கு தந்துச்சு. ஒரு மணி நேரம் சும்மா அந்தா மால்ல சுத்திட்டு திரும்ப 10.20 'க்கு போனா உள்ள விட மாட்டேனுன்டாங்க ...உங்க பங்க்ச்சுவாலிட்டி'ல இடி விழன்னு 10 நிமிஷம் கழிச்சு உள்ளை போயி உட்கார்ந்த்தோம் .

பெருசா ஒன்னும் வித்தியாசம் இல்லை தியேட்டர்'ல அப்படியே நம்ம ஊரு INOX தான் சவுண்ட் எபக்ட்ஸ் , ஸ்க்ரீன் எல்லாமே ... பாத்ரூம் கூட அழகா அதே ஒன்னுக்கு அடிக்கும் பொழுது வேடிக்கை பார்க்க ஒரு ஸ்க்ரீன் மூஞ்சிக்கு நேரா..

படம் பரவா இல்லை ... மொழி எல்லாம் தேவை படல புரிஞ்சிக்க ...லைட்டப்போட்டு தியேட்டர்ர விட்டு எழுந்துறிக்கும் பொழுது எண்ணி பார்த்த மொத்தமா 20 பேரு தான் இருக்கானுங்க

கர்மம் 20 பேருக்கு ஒரு ஷோவாடா?. இதே எங்க ஊரா இருந்தா இந்நேரம் வெள்ளி கிழமை நைட் ஷோவுக்கு சத்யம் தியேட்டர் புல்லாகி கும்மி அடிச்சி இருக்கோம்!!!

எப்படியும் அடிச்ச சரக்குக்கு கொஞ்ச நேரம் ac'ல உட்கார்ந்தாச்சு .
அப்படியே மப்ப மெயின்டைன் பண்ணி வீட்டுக்கு வண்டிய விட்டாச்சு

Thursday, August 28, 2008

வேதாளமாய் எழும் வார்த்தைகள்



















முட்டி எழுகின்றன வார்த்தைகள் !
வெறும் தடமின்றி,
உறையும் இடமின்றி,
கரைந்து செல்கின்றன
சில !
தயங்கி நின்ற பொழுதுகளின்
தொண்டைக்குழி இடுக்குகளில்,
சிக்கி திணறிய
வார்த்தைகள், சில வலிகளாய்!
நில்லென, மலிந்து கெஞ்சுகின்றது
என் மூளை !
எனினும்
ஒன்று, இரண்டு, மூன்றென
நில்லாத அடுக்குகளாய்
மனமெங்கும் வார்த்தைகள்!
தூள்தூளாக்கி செல்கின்றன
பெரும் காற்றாய்
சில வார்த்தைகள் !
இனிய தருணமாக்கி,
சுகம் தரக் கூடுமென,
பொத்தி வைத்த சில வார்த்தைகள்
மட்டுமே ஒளிந்து
நிற்க்கின்றன,
என் மன பெருவெளியில் !

Wednesday, August 20, 2008

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - சீனா தேசிய விளையாட்டு போட்டிகள்னு பெயர் மாற்றம்.

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் - சீனாவுக்கு வரவு , நமக்கோ தாறு மாறு செலவு - 2
ஒலிம்பிக்ஸ்ச, சீனா தேசிய விளையாட்டு போட்டிகள்னு பேரு மாத்துற அளவுக்கு சீனா போற போக்குல ஆக்கிரும் போல இருக்கு... எந்த போட்டியில பார்த்தாலும் சீனாக்காரனுங்க தான் கோல்ட் மேடல்ல வாங்கிட்டு போயிட்டு இருக்கானுங்க. சில நேரம் ஒரே போட்டியில ரெண்டு மெடல் கூட வாங்குறானுங்க இப்போ எல்லாம் டிவில ஒலிம்பிக்ஸ் பார்க்கிற ஆர்வமே இல்லை.அட என்னப்பா! வழக்கம் போல சீனா தான் கோல்ட் மெடல் வாங்கி இருக்கும்ன்னு ப்ரீயா விட்டுறேன் .

இப்படி இருக்குற எல்லாப் பதக்கத்தையும் வாங்கிட்டு , மத்த நாடுகள எல்லாம் தாளிச்சிட்டு இருக்குற சீனாவோட நிலைமை, ஒரு காலத்துல உலக விளையாட்டு அரங்குல இப்போ இருக்குற இந்தியாவோட நிலைமைய விட கேவலமா இருந்துச்சு.

1932 லாஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக்ஸ்ல சீனா சார்பா கலந்துகிட்டவங்க எத்தன பேரு தெரியுமா ?? 1 ..ஒரே ஒருத்தருபா .லியு சாங்க்சுன் (Liu Changchun) இவரு கூட ஒரு மெடல் கூட ஜெயிக்கலை.அப்போ இருந்து 1949 ல முழுமையான சீனா குடி அரசு உருவாக்கப்பட்டு, 32 வருஷம் கழிச்சு பெண்கள் வாலிபால் போட்டியில 1981 வருஷம் உலக கோப்பைய வென்றது தான் சீனா மொதமொதல்ல உலக விளையாட்டு அரங்குல பதிச்ச முதல் தடம்.


1984 வருஷம் மறுபடியும் லாஸ் ஏஞ்செல்ஸ்ல ஒலிம்பிக்ஸ் நடக்குது.
சீனா ஜிம்னாஸ்டிக் வீரர் லீ நிங்க் (Li Ning) 3 தங்க பதக்கத்த அள்ளிட்டு போறாரு.
அப்போ ஆரம்பிக்குது ஒலிம்பிக்ஸ்ல சீனாவோட சுக்கிர திசை. அன்னில இருந்து இன்னைக்கு வரைக்கும் உலக அரங்குல விளையாட்டு போட்டிகள்ள சாதனைகள் படைத்த சீன விளையாட்டு வீரர்களோட எண்ணிக்கை 1000'த்த தாண்டும்

எப்படி இந்த ராட்சச வளர்ச்சி இந்த 24 ஆண்டுகள்ல ? விளையாட்டு வீரர்களோட கடுமையான உழைப்பு, மக்களோட அரசோட உற்சாகம் ஒத்துழைப்பு எல்லாத்துக்கும் மேல அக்கறை .விளையாட்டு மேலயும் ,விளையாட்டு போட்டிகள் மேலேயும் சீன அரசு காட்டுற அக்கறை.

ஒவ்வொரு சீன மாநிலத்திலேயும் குறைஞ்சது ஒரு 5 -7 விளையாட்டு பல்கலைக்கழகங்களாவது இருக்கும்.நம்ம ஊர்ல இருக்கிற Y.M.C.A , இந்த சொச்சமிச்ச பல்கலைக்கழகங்களோட ஸ்போர்ட்ஸ் டிபார்ட்மென்ட் மாதிரி ஏதோ கடமைக்கு இருக்கிற வெத்து வேட்டுங்க கிடையாது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்துலேயும் குறைஞ்சது 1000 பேராவது படிப்பாங்க. அமெரிக்கா மற்றும் ஐரோப்பால இயங்குகிற விளையாட்டு சிறப்பு பயிற்சி நிறுவனங்கள் , பல்கலைக்கழகங்களுக்கு சமமான வசதியோட இயங்குற நிறுவனங்கள் இவை.. நம்ம ஊர்ல ஒரு IIT'ல டெக்னாலஜி சம்பந்தமா எவ்வளவு வசதி இருக்குமோ அவ்வளவு வசதி விளையாட்டு சம்பந்தமான இந்த பல்கலைக்கழகங்கள்ள இருக்கும்.

இதுல இருக்குற கல்லூரிகள்ல ஒவ்வொரு விளையாட்டு துறைலேயும் ஒரு 50 பேராவது படிப்பானுங்க.படிப்போட 2வது வருட முடிவுல எந்த விளையாட்டுல ஸ்பெஷல் ட்ரைனிங் எடுக்க விரும்புறாங்களோ அந்த விளையாட்ட தேர்ந்து எடுத்து அடுத்த 2வருடம் கடுமையான பயிற்சி மற்றும் அதன் தொழில் நுட்பங்கள், நுணுக்கங்கள் எல்லாம் கத்து கொடுக்க படும்.இதுல இருந்து தான் மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்ந்து எடுக்கப்படுவங்க. இது தவிர்த்து அரசு சார்ந்த விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள் இருக்கு. அதுலேயும் படிக்கலாம், ஆனா இது கொஞ்சம் மோசம்ப்பா. கிட்டத்தட்ட 3-4 வருஷம் ஒரே விளையாட்ட அக்கு வேற ஆணி வேற கழட்டி சம்பந்தப்பட்டவங்களுக்கு பேச்சு மூச்சாவே இத மாத்திடுவாங்க.

இது எல்லாத்துக்கும் மேல சீனர்களுக்கு தேச பற்று தேச பெருமை எல்லாம் மத்த நாட்டுகாரனுங்கள விட ஒரு 29 மடங்கு ஜாஸ்தி... ஏதாவது தன்னோட நாட்டுக்கு செய்யனும்னு மூட்டை தூக்குறவன்ல இருந்து கஞ்சா அடிக்குற பார்ட்டி வரைக்கும் எல்லாம் ஒரு முடிவோட இருப்பானுங்க .கடுமையான பயிற்சி, விளையாட்டு பற்றிய அறிவு, போதாத குறைக்கு வெறி ஏத்த தேச பற்று- இன பற்று இதெல்லாம் இருக்குற ஆளுங்க அப்புறம் தங்க பதக்கங்கள அள்ளிட்டு போகாம என்ன பண்ணுவானுங்கே ?

இப்படி வாழ்கையே விளையாட்டுக்குனு இருக்கற பசங்க, பொண்ணுங்களுக்கு,சீன அரசும் ஒரு விதத்துலேயும் குறைஞ்சது கிடையாது.விளையாட்டு வீரர்களோட வாழ்க்கையே இந்த விளையாட்ட நம்பி தான் இருக்கு, அவுங்களுக்கு தன்னோட குடும்பம் அதுக்கு சோறு போட வேண்டிய கவலை இல்லாம இருக்கனும் , அப்போ தான் முழுமனசா விளையாட முடியும்னு உணர்ந்து இதை எல்லாம் கவனிச்சுக்கும். மேலும் அவனுடைய பயிற்சிக்கு வேண்டிய சகல வசதிகள் எல்லாத்தேயும் செஞ்சு கொடுக்குது ..நம்ம ஊரப் (கிரிக்கெட்ட தவிர ) போல ஒவ்வொரு விளையாட்டு வீரனும் வெளிநாடு போயி போட்டிகள்ள பங்கேற்க ஸ்பான்சர்ருக்கு நாயாபேயா அலைய வேண்டிய நிலைமை இல்லை. அரசே இதெல்லாம் பார்த்துக்கும் .

இங்க வர டிவி விளம்பரங்கள்ல நடிகனுங்க மட்டும்மில்ல, கூடைப்பந்து ,பாட்மிண்டன், ஓட்டப்பந்தயம், வாலிபால்,வெயிட் லிப்டிங் இப்படி எல்லா விளையாட்டுலேயும் முன்னணில இருக்குற விளையாட்டு வீரர்கள்ள பார்க்கலாம்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேனே
ஒலிம்பிக்ஸ்ல மெடல் வாங்கின மக்களுக்கு சீன அரசு கொடுக்குற பரிசுகள்

தங்கப்பதக்கம் - 500 மில்லியன் க்வாய் , வீடு தோட்டந்துரவு , இத்யாதி...
இது தவிர்த்து ஸ்பான்சர் கம்பனிகள், விளம்பரதாரர்கள் தர்ற காசு வேற.

வெள்ளிப்பதக்கம் - 100 மில்லியன் க்வாய், சின்ன வீடு (small house' ங்க ) சின்ன தோட்டம், விளம்பர வருமானம், இத்யாதி, இத்யாதி.....

வெண்கலப்பதக்கம் - 25-50 மில்லியன் க்வாய் (சாதனைகளை பொறுத்து)
மேல சொன்ன எல்லாம் கொஞ்சம் கம்மியா.

(குழு போட்டிகளா இருந்தா அரசாங்க பரிச மட்டும் சரி சமமா பங்கு பிரிச்சு கொடுத்துடுவாங்க).

போதாதுன்னு இந்த வீரர்களுக்கு அரசாங்க வேலை,அவுங்க அடுத்த அடுத்த ஒலிம்பிக், உலகப்போட்டிகள்ள இன்னும் சிறப்பா பங்கேற்க வசதி- பயிற்சி,
இல்ல போதும் நாங்க போட்டிகள்ள பங்கேற்கிரதுலயிருந்து ஓய்வு பெறுறோம்ன்னு சொன்னா, அவுங்க சம்பத்தப்பட்ட விளையாட்டு துறைலியே சிறப்பு ஆலோசகர்களா அல்லது பயிற்சியாளர்களா வேலை.

எல்லாத்துக்கும் மேல மக்கள் அவுங்கள ஒரு ICON னா ஆக்கிறாங்க.

இப்போ 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்துல கால் தசை பிடிப்பு காரணமா ஆரம்பத்துலியே ஓடாம நின்னுட்ட லியு ஷியாங்( Liu Xiang) க்கு ஒட்டு மொத்த சீனாவும் கண்ண துடைச்சி விட்டு ஆதரவு சொல்லிட்டு இருக்கு. அவரும் அடுத்த ஒலிம்பிக்ஸ்ல சீனாவுக்கு கட்டாயம் தங்கப்பதக்கம் வாங்கி கொடுப்பேன்னு தீவிரமான பயிற்சியில இறங்கிட்டாரு.


நம்ம ஊரா இருந்தா இந்நேரம் , 'கொடும்பாவி கொளுத்தி, வீட்டு மேல கல்லடிச்சு, டிவி-பத்திரிக்கைக்காரனுங்க எல்லாம் ரசிகர்களை ஏமாற்றிய துரோகி 'அது இதுன்னு நல்லா ஏத்தி விட்டு நாலு காசு பார்த்துருப்பானுங்க .


இப்போ சொல்லுங்க மக்களே ஏன் சீனாக்காரனுங்க கோல்ட் மெடலா அள்ளிகிட்டு போக மாட்டனுங்க???



நன்றி :
சீனா டெய்லி
கூகிள்
க்வாய் - சீன கரன்சி ரெமின்பியின் (renminbi) உள்ளூர் பெயர்

1.00 United States Dollars = 6.86399 China Yuan Renminbi
 

| இங்கிலீஷ்'ல |